Showing posts with label வேண்டுதல். Show all posts
Showing posts with label வேண்டுதல். Show all posts

Saturday, 29 March 2014

இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்வோம்!

இறைவன் இட்ட கடமையை நிறைவேற்றுவோம்

இறைவன் கொடுத்த மறைவழி வாழ்ந்து நிற்போம்

இறைநபி வாழ்ந்த வழி நம் வாழ்வின் வழியாகும்

இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்வோம்

இறையருள் நாட நேரம் ஒதுக்க வேண்டாம்

இருக்கும் நேரமெல்லாம் இறையருள் நாடும் நேரமாகும்

இறையருள் கேட்க இறைமறை சொற்களே உய்ர்வானதாம்

இறையருள் கேட்க்கும் பொழுதினிலே இயல்பாய் இருத்தல் சிறப்பாகும்

இறையருள் கேட்க மனனம் செய்து வேண்டுதல் செயற்கையாய் இருந்துவிடும்

Friday, 28 March 2014

வேண்டுதல்

வேண்டுபவருக்கும் தருபவன்
வேண்டாதபவருக்கும் தருபவன்

வேண்டியது கிடைத்தாலும் நன்மையின் பொருட்டே
வேண்டியது கிடைக்கவில்லை யெனினும் நன்மையின் பொருட்டே

வேண்டியது உடனேயும் கிடைக்கலாம்
வேண்டியது காலம் தாழ்ந்தும் கிடைக்கலாம்

வேண்டியதை கேட்பதும் தேவை அற்றவனிடம் இருத்தல் வேண்டும்
வேண்டாதவைகளை தவிர்க்க வேண்டி கேட்பதும் தேவை அற்றவனாக இருத்தல் வேண்டும்

வேண்டுபவன் 'வேண்டுதல் வேண்டாமை இலானான' இறைவனாகத்தான் இருக்க முடியும்

'வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல'

விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனை தொழுபவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.

இறைநம்பிக்கை அற்றவன் என்று பெருமை பேசுவார்
'வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல' என்ற குறளை மேன்மையாக
பெருமை படுத்தி இயம்புவார்
#வேண்டுதல்

Saturday, 31 August 2013

நான் தனித்து விடப்பட்டவனாக உணர்கிறேன்


அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

இறைவா! நீ தனித்தவன் இதனை யாரும் அறிவார்
இறைவா! நான் தனித்து விடப்பட்டவனாக உணர்கிறேன்
இறைவா ! நீ அருளாளன் கருணை மிக்கவன்
இறைவா ! நான் உன்னருள் நாடி யாசிக்கிறேன் ,உன் அருள் நாடி நிற்கிறேன்
இறைவா ! நான் நல்லது ,கெட்டது அறிந்துக் கொள்ளும் ஆற்றலைத் நீ தந்து விடு!
இறைவா ! ஞானத்தை தந்து நன்மையான வழியில் வாழச் செய்துவிடு
இறைவா ! நான் தவறு செய்தால் அது எனது அறியாமையால் வந்த வினை
இறைவா ! நான் நன்மை செய்திருந்தால் உன் கருணையின் வெளிப்பாடு
இறைவா ! நீ விரும்பியபோது என்னை அழைத்துக் கொள்
இறைவா ! நான் உன்னிடம் வரும்போது நன்மையுடன் வரவேண்டும்
இறைவா !அனைத்தையும் நீதான் கொடுத்தாய்
இறைவா ! நன்மை ,தீமை பகுத்தறியும் திறனையும் நீதான் கொடுத்தாய்
இறைவா ! தீயோர் திரண்டு நிற்கும் நின்றதால் என்னை யறியாமல் தீமைகள் என்னிடம் வந்திருந்தால் மன்னித்துவிடு
இறைவா !உன் அருள் மழைவேண்டிஇறைஞ்சுகின்றேன் .