Saturday 23 March 2013

என் உயிரில் விளையாட யார் வருவாரோ!

உலவி வர சிறிய இடம்
உலவும் போது இடிப்பதில்லை
உன்னைக் கண்டு நான் மகிழ
உணவைத் தேடி நீ அலைய
உயிர் வாழ உணவு கொடுப்பேன் 
உயிர் வாழ நீர் மாற்றம் செய்வேன்
நிறம் நிறமாய் வாரிசு கொடுத்தாய்
வாரிசு உன்னை வளம் வரும்
வேதனை அறியா உள்ளம் பெற்றாய்
பெற்றது அறியா உள்ளம் கொண்டது
நான் என் மகிழ்வை அடைய
நான் கண்ணாடிப் பேழையில் விட்டு வைத்தேன்
நான் அறியேன் அதுவே உனக்கு கடுஞ்சிறையென
உன் உயிரில் நான் விளையாட
என் உயிரில் விளையாட யார் வருவாரோ!

No comments:

Post a Comment