Tuesday 31 March 2015

வால் வீச்சும் வழி வீச்சும்

 
என் வழியில் நான் போக
உன் வழியில் நீ போனாய்

போகும் வழியை விடுத்து
பார்வையை விழியோடு மோதச் செய்வதேன்
வால் வீச்சில் விழாத நான்
விழி வீச்சில் விழுந்து போனேன்

விழுந்த நான் விழுந்தபடியே கிடக்க
வேறு வழி நோக்கி மறைந்துப் போனாய்

மயங்கியத்தின் காரணம் கேட்கவில்லை மற்றவர்கள்
மயக்கத்தைப் போக்க நற்செயல்கள் செய்தனர்

மயக்கத்தின் காரணம் கேட்டால்
சொல்வது பொய்யாகவே போகும்

வாள் வீச்சில் வீழ்ந்தால் மரணம்
விழி வீச்சில் வீழ்ந்தால் மயக்கம்

மனதை கவரும் மயக்கம் காதல்
மனதை சுண்டும் மயக்கம் மாந்தரின் விழி வீச்சு

விழி பேசும் கண்ணாடி
விழி மயங்கவும் வைக்கும்

No comments:

Post a Comment