Saturday 31 October 2015

நான்

நான் சிரிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் அழும்போது உன்னை நினைக்கின்றேன்

நான் மற்றவரை நேசிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் தனித்து விடப்பட்டபோது உன் நினைவில் மூழ்கின்றேன்

நான் உண்ணும்போது உன்னை மறந்தேன்
நான் உண்ணும் உணவு உன்னால் கொடுக்கப்பட்டதாய் இருக்க
நான் உன்னை நினைக்கின்றேன் பசியால் வாடும்போது

நான் ஆரோக்கிய நிலையில் இருக்க உன்னை மறந்தேன்
நான் ஆரோக்கிய நிலை குன்றய உன்னருள நாடி உன்னை யாசித்து அழுகின்றேன்


நான் கோபமடைய என்னையும் மறந்து உன்னையும் மறந்தேன்
நான் அமைதியான நிலையில் இருக்க என் நினைவில் நீ இருக்கின்றாய்

இறைவா
என்னை எப்பொழுதும் உன் நினைவில் இருக்கச் செய்
நான் இறக்கும் தருவாயிலும் உன் நினைவில் இருக்கச் செய்

No comments:

Post a Comment