Showing posts with label இறை நேசம். Show all posts
Showing posts with label இறை நேசம். Show all posts

Friday, 1 August 2014

இனி இருக்கப் போகும் வாழ்வில் ..

காதலை அறிந்துக் கொள்ளவில்லை
காதல் அழகில் அடங்கிப் போனதாக அறிவு மங்கிப் போனது

அழகை நாடி அலைபாயும் மனம்
உண்மையை நாடாமல் சிதைந்துப் போனது

காதல் நேசத்தில் உள்ளடங்கியதனை
சேவை இதயத்தின் ஒளியானதென்பதனை
கடந்த காலங்கள் உணர்த்திவிட்டன

இனி இருக்கப் போகும் வாழ்வில்
உன்னோடு உயர்வாக வாழ்வை தொடர்வேன்

நேசிக்கின்றேன் உன்னை உயிர் உள்ளவரை
நேசிகின்றேன் உன்னோடு இருப்போரையும்

உங்களுக்கு சேவை செய்வதிலேயே
எந்தன் மனம் உவகை கொள்ளும்

Sunday, 18 May 2014

வேண்டாத பகை வேண்டாம்

இருந்தவருக்கும் வந்தவருக்கும் வேண்டாத பகை வேண்டாம்
போட்டவருக்கும் போடாதவருக்கும் வேண்டாத பகை வேண்டாம்

இருந்தவர் செய்த தவறோ
போட்டவர் செய்த தவறோ

வரக் கூடாதவர் வந்து விட்டாய்
வந்தவருக்கு வழி விடுதல் பண்பாடு

வந்த பின் உன்னிலை அறிவாய்
வந்த பின் என்னிலையும் அறிந்துக் கொள்

சேராத இடத்தில் சேர்ந்து செய்யத் தகாததை செய்தாய்
சேர்பிக்கப் பட்ட இடத்தில செய்வதை உயர்வாகச் செய்

Friday, 27 September 2013

நீ ஏன் என்னை உற்றுப் பார்க்கிறாய் !


நீ என்னை பார்க்கிறாய்
நீ ஏன் என்னை உற்றுப் பார்க்கிறாய்
நீ என்னை பார்த்ததோடு உன் பார்வையை திருப்பிக் கொள்
நீ என்னை பார்பதற்கு நான் உன்னுடையவள் அல்ல

நான் உன் பார்வையில் படாமல் இருக்க விரும்புகின்றேன்
நான் உன் பார்வையில் படாமல் இருக்கவே மேலங்கி அணிந்திருக்கிறேன்
நான் அணிந்திருக்கும் மேலங்கி என் கற்புக்கு பாதுகாப்பு
நான் அணிந்திருக்கும் மேலங்கி உன்னை தவறு செய்யாமல் தடுக்கும்

நான் என் இறைவனால் படைக்கப்பட்ட இறை நேசம் கொண்டவள்
நான் என் இறைவனால் படைக்கப்பட்ட பொருளல்ல
நான் என் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள விரும்பவில்லை
நான் என் கொள்கையில் பிடிப்போடு இருக்கிறேன் அது இறைவனின் ஆணையாக இருப்பதால்

என் சுதந்திரம் என் ஆளுமையில் உள்ளது
என் சுதந்திரம் என் ஆடையில் அடங்கி விடவில்லை
என் சுதந்திரம் என் உடலைக் காட்டி உன்னை வீழ்த்துவதற்கு அல்ல
என் சுதந்திரம் என் இறைவன் காட்டிய வழியில் வாழ்வதில் உள்ளது