Friday 1 August 2014

இனி இருக்கப் போகும் வாழ்வில் ..

காதலை அறிந்துக் கொள்ளவில்லை
காதல் அழகில் அடங்கிப் போனதாக அறிவு மங்கிப் போனது

அழகை நாடி அலைபாயும் மனம்
உண்மையை நாடாமல் சிதைந்துப் போனது

காதல் நேசத்தில் உள்ளடங்கியதனை
சேவை இதயத்தின் ஒளியானதென்பதனை
கடந்த காலங்கள் உணர்த்திவிட்டன

இனி இருக்கப் போகும் வாழ்வில்
உன்னோடு உயர்வாக வாழ்வை தொடர்வேன்

நேசிக்கின்றேன் உன்னை உயிர் உள்ளவரை
நேசிகின்றேன் உன்னோடு இருப்போரையும்

உங்களுக்கு சேவை செய்வதிலேயே
எந்தன் மனம் உவகை கொள்ளும்

இனி இருக்கப் போகும் வாழ்வில் ..

என் கடந்த வாழ்நாள் முழுவதும் விடுபட்ட நல்லவைகளை
என் தொடரும் வாழ்நாள் முழுவதும் விடுபடாமல் நல்லவைகளை செய்து தொடர்வேன்

என் கடந்த வாழ்நாள் முழுவதும் செய்துவிட்ட கெட்டவைகளை
என் தொடரும் வாழ்நாள் முழுவதும் கெட்டவைகளை தொடர விடமாட்டேன்

இப்பொழுது நீ என்னை அறியச் செய்து விட்டாய்
எப்பொழுதும் நான் உன்னை அறிந்து செயல்பட

நான் மற்றவரை நேசிப்பதை வெறுத்தேன்
யாரும் என்னை நேசிக்காமல் போனதால்

நான் என்னை அறிந்துக் கொண்டேன்
நான் உன்னை அறிந்துக் கொண்டதால்

நீ எனது இருண்ட இதயத்தை
நீ உனது உயர்ந்த கருணையால்
நீ எனது இதயத்திற்கு ஒளி தந்தாய்
நீ எனக்கு தந்த இதய உயிர் மூச்சு உள்ளவரை
நினை நினைத்து துதித்துக் கொண்டே இருக்கும்
உன்னிடம் கொண்ட உயர்வான நேசம்
உன்னிடம் பெற்ற உயர்வான கருணை
உலகில் உள்ளோர் மீதும் தொடரச் செய்யும்

என் தொடர் வாழ்வில் நேசமே
என் இதயத்தில் குடிகொண்டிருக்கும்
என் மனம் உனை துதித்துக் கொண்டிருக்கும்
என் உடல் உனை தொழுதுக் கொண்டிருக்கும்
என் சிந்தனை மனித நேயத்தில் செயல் பட்டுக் கொண்டிருக்கும்

உன் நினைவு உள்ளத்தில் உறுதியானதால்
என் உள்ளம் உறுதியாய் வலு பெற்று விட்டது
தவறு செய்வோரைக் காண தடுத்து நிறுத்துவேன்
நல்லது செய்வோரை ஊக்கப் படுத்தி துணையாக இருப்பேன்
அத்தனைக்கும் உன்னருள் என்னிடம் இருந்துக் கொண்டே இருக்கும்

No comments:

Post a Comment