Showing posts with label உறவு. Show all posts
Showing posts with label உறவு. Show all posts

Wednesday, 10 September 2014

இணைந்த வாழ்வையே நாடி நிற்க வேண்டும்

காட்டில் விலங்குபோல் அலைந்த மனிதன்
நாட்டிற்கு வந்ததால் சமூக விலங்கானான்

கருத்துகள் கொள்கைககள் மனிதனை வசப்படுத்துகின்றன
ரொட்டியும் வெண்ணையும் நிறைந்து கிடைக்க சித்தார்தங்கள்,கொள்கைகள் மறைந்து விடுகின்றன

மனிதன் உணர்ச்சியின் உணர்வுகளால் உந்தப் படுகின்றான்
மனிதனின் உணர்ச்சிகள் மாறுபட்டதாய் அமைந்து விடுகின்றன

Thursday, 3 April 2014

உலகில் ஒருவரும் முழுமையாக இருக்கமுடியாது

ஒருவரைப் பார்த்து பேசி பழகி நல்லவர் என்றால்
அதற்காக அடுத்தவர் கெட்டவர் என்ற பொருளாகிவிடாது

உலகில் ஒருவரும் முழுமையாக நல்லவரும் கெட்டவரும் ஆக இருக்கமுடியாது

சமுதாயத்தில் ஒரு அங்கமே நாம் .அதில் அனைத்தும் உண்டு
சுவை மாறுபட்டது
நட்பும் மாறுபட்டது
உறவும் வேறுபட்டது
சாலையில் நடக்க தூசி படவும் செய்யும்
தூசி நாசியில் ஏற தும்மல் நம்மை பாதுகாக்கும்
துணியில் அழுக்கு படிய துவைத்து கட்டுகின்றோம்
நம் மனதை தூய்மை படுத்த இறை நேசம் கொண்டு இறைவனைத் தொழ நம் மனது தூய்மை அடைகின்றது
குடியை வெறு குடிகாரனை வெறுக்காதே
முடிந்தால் அவரையும் நல்வழிப் படுத்த நன்மை வந்து சேரும்