Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts

Tuesday, 9 July 2013

பிறை பார்க்க சிரம் தூக்கி ஆகாயத்தினைப் பார் !


பிறை பார்க்க சிரம் தூக்கி ஆகாயத்தினைப் பார்
பிறை வடிவ புருவம் பிறைபோல் இருப்பதனைப் பார்க்க முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்

நம்மில் ஒளிந்திருக்கும் அற்புதத்தினை அறிய  இறைவனை அறியும்  வழியைப்
பார்
வந்த வழி தெரிந்தால் போகும் வழி அறியலாம்

ஞானம் கிடைக்க  குர்ஆனை பொருள் அறிந்து ஓதுதல் உதவும்.
ஞானம் கிடைக்க நம்மை அறிந்தால் இறைவனை அறியலாம்

இருக்கும் இடம் உயர்வாய் இருந்தால் போகும் இடமும் உயர்வாய் அமையும்
இருக்கும் இடம் இழிவாய் போனால் போகும் இடமும் இழிவாய் போகும்

இறைவனை அறிந்தும் அவன் மகிமையை புரிந்தும் அவனை தொழாமல் இருப்பது நன்றி கெட்ட செயலாகும்
நன்றி பாராட்டாதவர் நன்றி பாராட்டப்படுவதற்கு உரியவராக மாட்டார்

Thursday, 9 May 2013

கல்வி பெறுவது தன்னை தெரிவதற்கு தன்னை அழிப்பதற்கு அல்ல.

தற்கொலை செய்பவர் தற்குறி.
கல்வி பெறுவது தன்னை தெரிவதற்கு தன்னை அழிப்பதற்கு அல்ல.
கல்வி கற்பது மற்றவரை மதிப்பதற்கு மற்றவரை வருத்துவதற்கு அல்ல .
பாடசாலை சென்று படிப்பது பகுத்தறிவைப் பெறுவதற்கு பரதேசி ஆவதற்கு அல்ல
பாடசாலை தரும் சான்ரிதழ் வாழ்க்கையில் தகுதி பெற்றதற்காக அல்ல
கல்விக்கு கொடுக்கும் மதிப்பெண் அடுத்த அடி வைத்து நகர அது தன்னை அழித்துக் கொள்வதற்கு அல்ல .
----------------------------------------
கல்லூரியில் படிக்கும்போது சில கேள்விகளை ,பாடங்களை தேர்வுக்கு வரக் கூடியது என முக்கியப் படுத்தி சொல்வார்கள். தேர்வுக்காக படிக்கும் மாணவர்கள் அந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள் .அவர்கள் படித்தது ஏதும் தேர்வில் கேட்டிருக்க மாட்டார்கள். தேர்வு எழுதியதில் திணறல். அதனால் மதிபெண்கள் குறைந்துவிடுகிறது . படித்தது தேர்வில் விடை எழுதத்தான் என்ற நிலையாகி கற்பதின் அடிப்படை கொள்கையே அடிபட்டுப் போகும் நிலை உருவாகிறது.

அறிவு ,ஞானம், திறமை மற்றவை அனைத்தும் அறிந்து ,தெரிந்து. திறிந்து அடிபட்டு அனுபவப்பட்டு வருவதில்தான் சிறப்பாக அமையும்.
-----------------------------------------