Tuesday 9 July 2013

பிறை பார்க்க சிரம் தூக்கி ஆகாயத்தினைப் பார் !


பிறை பார்க்க சிரம் தூக்கி ஆகாயத்தினைப் பார்
பிறை வடிவ புருவம் பிறைபோல் இருப்பதனைப் பார்க்க முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்

நம்மில் ஒளிந்திருக்கும் அற்புதத்தினை அறிய  இறைவனை அறியும்  வழியைப்
பார்
வந்த வழி தெரிந்தால் போகும் வழி அறியலாம்

ஞானம் கிடைக்க  குர்ஆனை பொருள் அறிந்து ஓதுதல் உதவும்.
ஞானம் கிடைக்க நம்மை அறிந்தால் இறைவனை அறியலாம்

இருக்கும் இடம் உயர்வாய் இருந்தால் போகும் இடமும் உயர்வாய் அமையும்
இருக்கும் இடம் இழிவாய் போனால் போகும் இடமும் இழிவாய் போகும்

இறைவனை அறிந்தும் அவன் மகிமையை புரிந்தும் அவனை தொழாமல் இருப்பது நன்றி கெட்ட செயலாகும்
நன்றி பாராட்டாதவர் நன்றி பாராட்டப்படுவதற்கு உரியவராக மாட்டார்

No comments:

Post a Comment