Showing posts with label துன்பம். Show all posts
Showing posts with label துன்பம். Show all posts

Saturday, 29 November 2014

'நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.'

கவலை வர மறையின் அத்தியாய ஆறுதல் சொற்கள் ஒத
மனம் அமைதி பெற நிம்மதி நிறையும்

இறைவா !
என்னுள்ளும் நிறைந்திருகின்றாய்
எல்லாவற்றிலும் நிறைந்திருக்கின்றாய்
எல்லாவற்றையும் அறிய குர்ஆன் யெனும் மறை தந்தாய்

மதியைத் தந்து உம்மறையை அறிய ஆர்வம் தந்தாய்
மதி தந்தும் உம்மறையை ஓதியும்
உம சிறப்பை அறிந்திருந்தும்
கவலை வந்த போது கலங்கி நிற்கின்றேன்
கவலையை நாயகம் அடைந்த போது
“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது” யென்ற
உமது ஆறுதல் சொற் தொடர்கள் நினைவுக்கு வந்தது
உமது உயர் மொழிகள் மனதை வருடியது
திரும்பத் திரும்ப என் நாவு சொல்ல
மனதில் அமைதிவந்தது

Monday, 15 July 2013

கவலை ,துயரம் இல்லாதவர் யார் !

துன்பம் வர துயலாதே !
துன்பத்தையும் நன்மையாக்கும் ஆற்றல் உன் மனதில் உள்ளது .
துயரமும் நன்மையைத் தரும் ஆற்றல் உள்ளது .அது உன்னை இறைவன் பக்கம் இழுக்கும். துன்பம் துவள இறைவனை அணுகும்போது இறைவனோடு ஒன்றுபடுதல் முழுமையாக இருக்கும் .
நீ விரும்பாத மனைவி உனக்கு கிடைத்து விட்டால் அவளை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை .அதற்கு மாறாக அன்பை கொடுத்து அவளை உன் மனதோடு ஒன்ற வழியை நாடு! .
நம் குழ்ந்தை தவறு செய்தால் நாம் அவனை ஒடுக்குவோமா! அல்லது ஒதுக்கிவிடுவோமா! அவனிடத்து உள்ள பாசம் போய் விடுமா ? நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதால் இறைவனை குறை சொல்வதுபோல் உள்ளது.