Showing posts with label குர்ஆன். Show all posts
Showing posts with label குர்ஆன். Show all posts

Saturday, 29 November 2014

'நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.'

கவலை வர மறையின் அத்தியாய ஆறுதல் சொற்கள் ஒத
மனம் அமைதி பெற நிம்மதி நிறையும்

இறைவா !
என்னுள்ளும் நிறைந்திருகின்றாய்
எல்லாவற்றிலும் நிறைந்திருக்கின்றாய்
எல்லாவற்றையும் அறிய குர்ஆன் யெனும் மறை தந்தாய்

மதியைத் தந்து உம்மறையை அறிய ஆர்வம் தந்தாய்
மதி தந்தும் உம்மறையை ஓதியும்
உம சிறப்பை அறிந்திருந்தும்
கவலை வந்த போது கலங்கி நிற்கின்றேன்
கவலையை நாயகம் அடைந்த போது
“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது” யென்ற
உமது ஆறுதல் சொற் தொடர்கள் நினைவுக்கு வந்தது
உமது உயர் மொழிகள் மனதை வருடியது
திரும்பத் திரும்ப என் நாவு சொல்ல
மனதில் அமைதிவந்தது

Monday, 31 March 2014

“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”


ஆளுமை சக்தி பெற்றதாய் நினைப்போர்
ஆணவ புத்தி பெற்று களிக்கின்றனர்

மானம் போக ஆணவம் அடங்கும்
போன இடம் அறியாமல் இருளில் மூழ்குவர்

வேண்டாம் இந்த வீணான விளம்பரம்
வேண்டியவர் இருந்த இடம் விட்டு அகல்வர்

உம்மையே நீர் அறிந்தால்
உமக்கோர் உண்மை விளங்கும்

ஓரிடம் உண்மையின் உறைவிடம்
ஓதி உம்மை அறிய  ஓரிடம்

உமை ஒளி பெறச் செய்யும் ஓரிடம்
உமக்குள் உள்ளதனை நீர் அறிவீர்

என்னேரமும் இறைவனை நேசித்து
இயன்றதனை செவ்வனே செய்வீர்

Thursday, 11 July 2013

மக்கா ஹரம் ஷரீஃபில் தொழுகை நேரலை

 மக்காவின் தொழுகை நேரம் மற்றும் ஹரம் ஷரீஃபில் தொழுகை நேரலை

மக்காவின் தொழுகை நேரம் மற்றும் ஹரம் ஷரீஃபில் தொழுகை நேரலை
குர்ஆன் - ஓதுவதால் அடையும் நன்மைகள்,  குர்ஆன் தலைப்புகள், மற்றும் தப்ஸீர் ,விளக்கங்கள்
இவைகளை ஆங்கிலத்தில் அறிய   இங்கு Quran சொடுக்குங்கள்
இவைகளை தமிழில்  அறிய   இங்கு.தமிழில்  குர்ஆன் சொடுக்குங்கள்