Showing posts with label மன்னிப்பு. Show all posts
Showing posts with label மன்னிப்பு. Show all posts

Sunday, 6 April 2014

நான் சொன்னதை நானே அறியவில்லை

நான் சொன்னதை நானே அறியவில்லை
நான் சொன்னதை நீ அறிந்து கொண்டாய்
நான் சொன்னது உன் மனதை புண் படுத்துமென்று நான் நினைக்கவில்லை
நான் சொன்னதால் உன் மனதை புண் படுத்திவிட்டதை நான் அறிகின்றேன்
நான் இனியொரு முறை அவ்விதம் சொல்ல விரும்பவில்லை
நான் சொல்லிய வார்த்தைகளின் பிரதிபளிப்பு உன் முகத்தில் காட்டிக் கொடுத்தது
நான் சொல்லிய வார்த்தைகளுக்கு நீ பதில் வார்த்தைகளை சொல்ல வில்லை
நான் பார்க்கிறேன் உன் முகம் உடைந்த கண்ணாடியாக மாறியதை

Friday, 28 March 2014

நான் உன் பார்வையில் இல்லாமல் இல்லை

இறைவா எனக்கு மன்னிப்பை வழங்கிடு
நிறைவாய் நான் உன்னை பிரார்த்தித்து இறைஞ்சுகிறேன்

நான் என் வாழ்நாட்களில் நல்லது செய்யவில்லை
நான் உன்னை நினையாமல் நல்லது செய்ய விடுத்தேன்
நான் வேண்டுமென்றே அனைத்தும் செய்யவில்லை
நான் செய்தவைகள் அறிந்தும் அறியாமலும் செய்தவைகள்
நான் செய்தவைகள் அனைத்தும் நீ அறிந்துக் கொள்வாய் என அறியாமல் போனேன்
நான் சென்ற தவறான வழிகள் அறிந்து இறுதியாக உன் வழி நாடி நிற்கின்றேன்
நான் கேட்கும் ஒரு வாய்ப்பு நல்லது செய்ய வேண்டி
நான் வேண்டுதல் கேட்டு உன்னிடம் நிற்கின்றேன்

Thursday, 9 January 2014

இறைவன் மன்னிப்பானா!


தவறு செய்தவர் இறைவன் மன்னிப்பு நாடி இறைவனின் தயை தேடட்டும்
தவறு செய்தவர் மற்றவருக்கு அந்த தவறை செய்தால் தவறால் பாதிக்கப் பட்டவர் மன்னிப்பது அவசியம்.
பாதிக்கப் பட்டவர் மன்னிக்கும் வரை இறைவன் மன்னிக்க மாட்டான் .
(கடன் அடைக்கப் படும்வரை ,ஒருவரை மனம் நோக பேசுதல் மற்றும் பல )

தனக்குத் தானே ஒருவர் தவறு செய்து விட்டால் இனி எந்த பாவமான தவறுகளை செய்ய மாட்டேன் என்ற
மனஉறுதியோடு இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
அது இறைவனுக்கும் அவருக்கும் தொடர்பு கொண்டது அது கடமையானதாக இருந்தாலும்.