Sunday 6 April 2014

நான் சொன்னதை நானே அறியவில்லை

நான் சொன்னதை நானே அறியவில்லை
நான் சொன்னதை நீ அறிந்து கொண்டாய்
நான் சொன்னது உன் மனதை புண் படுத்துமென்று நான் நினைக்கவில்லை
நான் சொன்னதால் உன் மனதை புண் படுத்திவிட்டதை நான் அறிகின்றேன்
நான் இனியொரு முறை அவ்விதம் சொல்ல விரும்பவில்லை
நான் சொல்லிய வார்த்தைகளின் பிரதிபளிப்பு உன் முகத்தில் காட்டிக் கொடுத்தது
நான் சொல்லிய வார்த்தைகளுக்கு நீ பதில் வார்த்தைகளை சொல்ல வில்லை
நான் பார்க்கிறேன் உன் முகம் உடைந்த கண்ணாடியாக மாறியதை

அம்பு எய்தவனுக்கு வலியேது
அம்பு எய்தததால் பாதிக்கப் பட்டவனுக்குத்தானே வலி தெரியும்

சொல்லிய வார்த்தைகள் வேகமாக வந்தவைகள்
சொல்லிய வார்த்தைகள் சிந்திக்காது விடுத்த வார்தைகள்
சொல்லிய வார்த்தைகள் வேதனையை தந்து விட்டன

நான் தவறாக சொல்லிய வார்தைகளுக்காக உன்னிடம் மன்னிப்பை நாடுகின்றேன்
நான் உன்னிடமிருந்து மன்னிப்பை பெறாவிட்டால் இறைவனும் என்னை மன்னிக்க மாட்டான்
நான் மற்றவருக்கு செய்த தவறை பாதிக்கப் பட்டவர்தான் மன்னிக்க வேண்டும்
#மன்னிப்பு

No comments:

Post a Comment