Showing posts with label வெளிச்சம். Show all posts
Showing posts with label வெளிச்சம். Show all posts

Tuesday, 8 July 2014

மனது புதுமைகளை தந்துக் கொண்டே இருக்கும்

கடலில் உயிர் வாழ்பவை பல் வகை
கடலில் உயிர் போக்கியவை பல் வகை

மனதில் உதித்தவை பல் வகை
மனதோடு அழிந்தவை பல் வகை

கடலில் இருப்பதும் வாழ விரும்புகின்றது
மனத்தில் இருப்பதும் சொல்ல விரும்புகின்றது

கடலில் அழிந்தவை பயனற்றுப் போனது
மனதில் உதித்தவை பயன்படுத்தாமல் பயனற்றுப் போனது

கடல் அலையும் தொடரும்
கடல் நீரும் வற்றாது

Monday, 28 October 2013

சொல்வது உன்னதாய் இருக்கட்டும்

பல வார்த்தைகள் ஒரு வரியாகிறது
ஒரு கருத்து பல வரிகளாகிறது

ஒரு கருத்து மனதில் பதிகிறது
பல கருத்துகள் மறந்து போகிறது

ஒரு சொல் உயிரையே மாய்க்கிறது
ஒரு சொல் உயிரை வாழ வைக்கிறது

அம்பு எய்தவன் மகிழ்கிறான்
அம்பால் அடிப்பட்டவன் மரணிகின்றான்

எயதவனுக்கு நொய்வில்லை (நொய்வு = மனவருத்தம்)

எய்யப்பட்டவனுக்கு வேதனை

சொல்வதை உயர்வாகச் சொல்
சொல்வது உயர்வாய் இருக்க இருபக்கமும் உயர்வு

சொல்வது உன்னதாய் இருக்கட்டும்
சொல்வதில் ஏன் கடன் வாங்கி சொல்கிறாய்