Tuesday, 10 June 2014

பையனுக்கு படிப்பு வராது என்பதை யார் சொல்ல வேண்டும்!


பையனுக்கு படிப்பே வரவில்லை
பையன் வீட்டில் பேசுவது தமிழில்
பையன் படிப்பதோ ஆங்கில மொழியில்

பையனுக்கு படிப்பு வராது என்பதை யார் சொல்ல வேண்டும்
பையனுக்கு படிப்பு வராது என்பதை மனோதத்துவ மருத்துவர் சொல்லுவாரா !
பையனுக்கு படிப்பு வருமென்பதற்கு விளக்கங்களை கொடுப்பார்

பொதுவாக ஆங்கில மொழியில் படிக்கும் பையனுக்கு
தமிழும்,கணிதமும் கடினமாக இருப்பது இயல்பு

இறைவனை நினைத்து அவன் நினைவோடு ஒன்றி தொழுவது மகிழ்வு

மகிழ்வு
வாசனைப் பொருளை நாம் வைத்திருக்க
வாசனை திரவத்தை நம் ஆடையில் தடவிக் கொள்ள
அவைகளை மற்றவர்களுக்கும் பகிர்தளிக்க
மணமும் தந்து மனமும் மகிழ்கின்றது

இறைவனை நினைத்து அவன் நினைவோடு ஒன்றி தொழுவது
மறைந்து விடும் மேகங்கள் சிறிது நேரம் நின்று மழையைக் கொட்ட அதில் நனைந்து மகிழ்வது
எழுதியது எதிர்பாராமல் பத்திரிகையில் வந்ததால் அதனை மற்றவரிடம் காட்டி மகிழ்வது
தேர்வில் ,போட்டியில் சிறப்பான வெற்றி பெற்றதால் அடுத்தவர்கள் நம்மை பாராட்டுவதால் மகிழ்வது
குழந்தைகளுக்கு புதிய பொருட்களை கடையில் வாங்கிக் கொடுப்பது

Saturday, 7 June 2014

இறையியல் 'உலமா' பட்டம் (இஸ்லாம் பற்றிய அறிவு) பெற்ற அறிஞர்கள்.

இறையியல் 'உலமா' பட்டம் பெற்றதால் மட்டும் மதிக்கப் படுவது கிடையாது

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இறையியல் 'உலமா' பட்டம் (இஸ்லாம் பற்றிய அறிவு) பெற்ற அறிஞர்கள்.

இஸ்லாமிய கல்வி போதிக்கும் பாடசாலைகளில் (மதரஸாக்களில்) மார்க்க அறிவு போதிக்கும் போது மார்க்க முறைப்படி வாழவும் பயிற்சிக்கப் படுகின்றது . சில ஆண்டுகள் கற்ற பின்பு போதிய அளவு மார்க்க அறிவு பெற்ற பின்பு தேர்வு நடத்தி அதில் மதிப்பெண்கள் பெற்ற பின்பு அந்த உலமா' பட்டம் (சனது) கொடுக்கின்றார்கள்.

Wednesday, 4 June 2014

துணையே துணிவைத் தரும் வேண்டாததைத் தடுப்பதற்கும்

என்னுள் இருப்பதை நானே அறியமுடியவில்லை
உன்னுள் இருப்பதை நான் அறிய முயலவில்லை

என்னுள் இருப்பதை அறிந்தால்தான் இணைவேன் என்கிறாய்
என்னுள் இருப்பதை அறிய முயன்றால் என்னோடு இணைய மாட்டாய்

என்னுள் இருப்பதை அறிய உன்னாலும் முடியாது
என்னுள் இருப்பதை அறிய உன்னைச் சார்ந்தவர்களாலும் முடியாது

இறைவனை அறிந்திடு.

உண்ணும் சோறு அரிசியிலிருந்து வந்தது
அரிசி நெல்லிருந்து வந்தது
நெல் நெர் பயிருலிருந்து வந்தது
நெர் பயிரு வளர நீர் தேவைப் பட்டது
நீர் மழையாக கொட்டியது
மழையாக கொட்டிய நீர் பூமியில் சேர்ந்தது
ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக உள்ளது
ஆய்வை தொடர அது முடிவில்லாமல் தொடர்கின்றது
முடிவை அறிய அனைத்துக்கும் மேல் ஒரு சக்தி உள்ளதை அறிய முடிகின்றது
ஆய்வை தொருங்கள் தெளிவு கிடைக்கும்

தான் பெற்ற பிள்ளையானாலும் ..

நாம் பெற்ற பிள்ளையை அடுத்தவர் மத்தியில் கண்டிப்பதையோ அல்லது தண்டிப்பதையோ அவன் விரும்புவதில்லை .
அவ்விதம் செய்ய உறவு விரிவு படுகின்றது .

இந்நிலையில் அடுத்தவரை கேவலப் படுத்துவதும் ,தூற்றுவதும் யார் ஏற்றுக் கொள்வார் . விரோதம் அதிகமாகும்

நீர் பெற்ற அறிவு மக்களை நல்வழி படுத்த மற்றும் நேர்வழி படுத்த உதவட்டும் .அது உன்னிடமிருந்து ஆரம்பிக்க நீர் உயர் வாழ்வை முதலில் பெற்றுக் கொள்

Sunday, 1 June 2014

மக்கள் விரும்பியது இறைவனால் விரும்பாமல் போனது

லைக் கொடுத்தது மக்கள்.அன்லைக் செய்தவன் இறைவன்.

நான் உன்னைப் பார்த்தேன்
நீ என்னைப் பார்க்கவில்லை

நீ என்னைப் பாராமையால்
நான் உன்னை பாராமல் போகவில்லை

நீ எழுதிய வரிகள் அனைவரையும் கவர்ந்தது
நான் எழுதிய வரிகளும் அனைவர்களாலும் கவரப் பட விரும்பினேன்