Saturday, 11 July 2015

நோன்பு நோற்றதால் நிறைவு கொள்கின்றேன்

நோன்பை கடமையாக்கினாய்
நோன்பை நாங்கள் நேசிக்கின்றோம்
நோன்பு நோற்றதால் நன்மைகள் கூடும் என்கிறாய்
நோன்பு வைத்தால் பாவங்கள் குறையும் என்கிறாய்
மற்ற பலன்களை எதிர்பார்க்க வில்லை
நோன்பு நோற்றதால் நிறைவு கொள்கின்றேன்
மற்றதை உன்னிடம் விட்டு விட்டேன்
முற்றிலும் அறிந்தவன் நீ
நோன்பால் நாங்கள் அடையும் நிம்மதியே உயர்வானது
நோன்புக் காலத்தில் அடையும் உயர்வும் ,மதிப்பும் ,நிம்மதியும்
நீ கொடுத்த அருள்
உனக்கே அனைத்து புகழ் அனைத்தும்

அன்னை பாத்திமா அவர்கள் சிந்திய கண்ணீர்

நபிகள் நாயகத்தின் பேரர்கள் ஹசன் ,ஹுசன் இருவர்களும் தங்களது சிறு வயதில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதனை கண்ணுற்ற தாய் பாத்திமா மனம் கலங்கி அழுதார்கள்
தங்கள் தாய் அழுவதை கண்ட பிள்ளைகள் தங்கள் சண்டையை நிறுத்தி
தாயிடம் பாசமாக 'ஏனம்மா !அழுகிறீர்கள் ' என்று வருத்தமாக கேட்டார்கள்
'குழந்தைகளை உனக்கு சரியாக வளர்க்கத் தெரியவில்லையே'
என்று அல்லாஹ் கேட்டால் நான் என்ன சொல்வேன்'
என நினைத்து மனம் வருந்துகின்றது என்றார்கள்
அன்னை பாத்திமா அவர்கள் சொன்ன பதில் ஹசன் ,ஹுசன் அவர்களுக்கு மிகவும் வருத்தத்தை தந்தது
இனி தங்களுக்குள் சண்டை போடமாட்டோம் என்று அன்னைக்கு ஆறுதல் மொழி சொன்னார்கள்

இஸ்லாத்தில் குழந்தையை சிறப்பாக வளர்ப்பது தாய்க்கு முக்கியமாக கருதப் படுகின்றது

உங்கள் வாழ்க்கை முழுமை அடைய ...

திருமணம் மூலம் நீங்கள் ஒரு மனைவி / கணவர் மட்டும் அல்ல ,
நீங்கள் உங்கள் உலகம் முழுவதும் பெறுகின்றனர்.

தற்போது முதல் உங்கள் நாட்கள் முழுவதும் வரை, உங்கள் மனைவி / கணவர் உங்கள் பங்குதாரர்,
உங்கள் துணை, உங்கள் சிறந்த நண்பர்
அவள் / அவன் உங்கள் தருணங்களை உங்கள் நாட்களில், உங்கள் ஆண்டுகளுக்கு பகிர்ந்து. அவள் / அவன் உங்கள் இன்பத்திலும் துன்பத்திலும், உங்கள் வெற்றி தோல்விகளை, உங்கள் கனவுகள் மற்றும் உன் பயத்தைப் பகிர்ந்து. நீங்கள் மோசமாக இருக்கும் போது, அவள் / அவன் நீங்கள் சிறந்த பாதுகாப்பு இடம்பெறவுள்ளனர்; உங்களுக்குள் ஒரு இரகசிய உண்டு,
அவள் / அவன் அதை வைத்து; நீங்கள் ஆலோசனை தேவைப்படும் போது, அவள் / அவன் நீங்கள் சிறந்த ஆலோசனை வழங்குவார்.
அவள் / அவன் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும். நீங்கள் காலையில் எழுந்து போது உங்கள் கண்கள் காணும் முதல் விஷயம் / அவளோடு இருக்கும். ஒரு கணம் அவள் / அவன் உன்னோடு அல்ல உடல், அவள் / அவன் அவள் / அவன் இருதயம், மனம் மற்றும் ஆன்மா
நீங்கள் மற்றவருக்காக , பிரார்த்தனை செய்கின்றீர்கள் நல்லதை நினைக்கிறீர்கள்

Wednesday, 3 June 2015

காலை உணவின் முக்கியத்துவம் அறியாமல் இருப்பது ஏன்?

காலை உணவின் முக்கியத்துவம் அறியாமல் இருப்பது ஏன்?

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி ...

இறைவன் தந்த அந்த அருட்கொடையான உணவை நாம் அவசர கோலத்தில் சாப்பிடுகின்றோம் . பல இறக்குமதிகளில் 'பாஸ்ட் புட்' ஒன்றாக சேர்ந்துக் கொண்டது.
நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழ்வார் என்பது ஆன்றோர் மொழி . மென்று தின்றால் தேவையான உமிழ்நீர் உண்டாகி நமது உணவை நன்கு செரிக்கச் செய்கின்றது. நாமும் உணவு சாப்பிடும் போது இது இறைவனால் கொடுக்கப்பட்டது என அவனுக்கு நன்றி செலுத்தி மெதுவாக ரசித்து உண்ணும்பொழுது உடல் ஆரோக்கியம் கிட்டும் . இயற்கையின் இனிமை கண்டு ரசிப்பதும் அதனை ஆராய்ச்சி செய்வதும் நம்மை இறைவனது ஆற்றல் அறிய வழி வகுக்கின்றது. நாம் உண்ணும் உணவினை அனுபவித்து ரசித்து உண்பதில் நமது உடலுக்கு ஆரோகியதினை தருவது மட்டுமில்லாமல் நிச்சயமாக இறைவனது 'அல்லாஹ்வின்' (சிலர் இயற்கை என்று சொல்வார்கள்) ஆற்றல் அதில் அடங்கி இருப்பதனை அறிய வருகின்றோம். உண்ணும் உணவு எங்கிருந்து வந்தது என்பதனை என்றாவது சிந்தனை செய்து பார்த்தீர்களா! சோறு அரிசியிலிருந்து வந்தது .அரிசி நெல்லிருந்து வந்தது ... தொடருங்கள் ..உங்கள் சிந்தனையை . இறுதியில் உங்கள் முடிவு இறைவனது மாட்சிமை உங்கள் மனதில் அறிய வரும்.

நம்பிக்கை இல்லையெனில் அதனை தொடர்வது போலியாகிவிடும்.

 உங்கள் நம்பிக்கை உங்கள் உயர்வுக்கு வழிகாட்டும்!
 இறைவன் , மதம் மற்றும் மார்க்கம் இவைகள் அனைத்தும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையின் ஆணிவேர் . நம்பிக்கை இல்லையெனில் அதனை தொடர்வது போலியாகிவிடும்.  ஆனால் இறைவன்  தேவை என்ற ஒரு நம்பிக்கை மட்டும் அவசியம் தேவைப்படுகிறது. இறைவன்  அவசியம் என்று  நம்பினால்,  இறைவன்  உள்ளதையும்  நம்ப வேண்டும்.
இறைவன் மீது கொண்டுள்ள நம்பிகையும் அவன் மீது வைத்துள்ள பற்றும் உங்களை ஆத்ம திருப்தியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மனித சட்டத்தின்மீது   மனிதனுக்கு மரியாதையும் பயமும் இல்லை. மனித சட்டத்தினை மனிதன் தான் விரும்பிய போக்கில் தனக்கு தகுந்ததுபோல் மாற்றம் செய்துக் கொண்டு வாழ முற்படும்போது பல குழப்பங்களும் அதிருப்தியும் சச்சரவும் ஏற்படத்தான் செய்கின்றது . மனிதன் கொண்டு வரும் சட்டங்கள் இறை நம்பிக்கையுடன் அதன் அடிப்படையில்  இருக்க வேண்டும். எந்த ஒரு மார்க்கமும் தவறு செய்யத் தூண்டுவதில்லை.
இறைவன் மீது  முழு பக்தி கொண்டு, அன்பு, அற வழி வாழ்பவருக்கு எல்லா நாளும்,நன்மை தரும்.

Tuesday, 2 June 2015

நம்மை நாம் அறிந்துகொண்டோம்!

நம்மை நாம் அறிந்துகொண்டோம்!
நம்மை மற்றவர் எவ்விதம் அறிந்து கொண்டார்கள் என்பதில்தான் உயர்வே உள்ளது.

நம் அறிவின் ஆற்றல் உயர்வாக உள்ளதாக நாமே ஒரு எடை போட்டுக்கொண்டு அதனை தவறாக செயல்படுத்தும் போது அனைத்தும் விரயமாகின்றது.

பொது வாழ்வில் வந்த பின்பும் பொதுவாக ஒரு கருத்தை வெளியே கொடுத்த பின்பும் அது உங்கள் உரிமையோடு மட்டும் நிற்பதில்லை . மக்களின் விமர்சனத்திற்கு அது உள்ளாகின்றது

திகைக்க வைக்கும் துபாய் -Stunning Dubai

துபாயை அறியாதோர் யாரும் இல்லை. இருப்பினும் நம் மக்களுக்கு வேலை தருவதில் முக்கிய அங்கம் வகிக்கும் நகரங்களில் துபாய் இருக்கும் பொழுது அது நம் நினைவில் வந்துக் கொண்டே இருக்கின்றது , ஏதோ ஒரு வகையில் நம் குடும்பத்தில் உள்ளோர் ஒருவர் அங்கு சென்று வேலை செய்து வருவதனை நாம் அறிவோம்,
எங்கள் குடும்பத்திலும் அதிகம் நபர் துபாயில் அதிகம் உள்ளனர்.

துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெரிய நகரமாகும். அங்கு போதிய அளவு எண்ணெய் வளம் இல்லாததால் துபாய் தன கவனத்தினை வேறு ஒரு வகையை தேடிக் கொண்டு அதில் வெற்றியும் பெற்ற நகரமாக விளங்குகின்றது . ஹாங்காங் போன்று தன்னை ஒரு உலக சந்தை கூடமாக தன்னை உருவாக்கிக் கொண்டது . ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இது மிகவும் பிரசித்திப் பெற்றது. இது ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் இஸ்லாமியர் மட்டுமில்லாமல் அனைத்து மார்க்கத்தினை சார்ந்த மக்களும் இங்கு வாழ்கின்றனர்.(இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அனைத்து கேளிக்கைகளுக்கும் அது இடமாகவும் உள்ளது)
இஸ்லாமியர், கிருத்துவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். அனைத்து மத மக்களும் இங்கே நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர்.ஆனால் அரபியர்களைத் தவிர மற்றவர்களுக்கு அது குடிஉரிமை கொடுப்பதில்லை.வெளிநாட்டு முதலீடு பெருக சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்துள்ளது . துபாயைச் சார்ந்த அரபியர்களைக் காட்டிலும் மற்ற மக்களே மிகைத்து அங்கு உள்ளனர்.