Thursday 2 May 2013

அக்கரைமீது அக்கறை வர

அக்கரைமீது அக்கறை வர
இக்கரை விட்டு அக்கரை போக
அக்கறை இல்லை அக்கரையில்
இக்கரைக்கு அக்கரை பச்சை

இக்கரைவந்தால் அக்கரை எப்பொழுது போவாய் என அக்கறையோடு கேட்க
அக்கரையிலிருந்து  அக்கறையோடு அனைத்தும் கொண்டு வந்திருப்பேன் என பெட்டி திறக்க
அக்கறையிருந்தால்தானே கொண்டு வருவீர்கள் யெனச் சொல்ல
கறைபிடித்த மனம் கொண்டோரை கண்டு கொண்டேன்

அக்கறையோடு பேசுவாள் நான் அக்கரையிலிருக்க
இக்கரை வந்தால் பேச்சும் அக்கறையாக அமையும்
இக்கரையில் வைகறை நாட்கள் பல ஓட
'அக்கரைக்கு எப்போது' யென்பாள் நக்கலாக

அக்கரை வாழ்கையில் நடந்ததை வெளியில் சொல்லமுடியாது
இக்கரையில்  வீட்டிற்குள் நடந்தவைகள் வெளியில் சொல்லமுடியாது
அக்கரை போகும்போதேல்லாம் பெற்ற  மக்களை விட்டுப் பிரிய மனம் அழுகும்
அக்கறையோடு அனைத்தையும் அடக்கிக் கொண்டு அக்கரை போக வேண்டும்

2 comments:

  1. ரசிக்க வைத்தன...

    மக்களை விட்டுப் பிரியும் மனது கலங்க வைத்தன...

    ReplyDelete
  2. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete