Tuesday 21 May 2013

உங்கள் சரிதம் சொல்லுங்களேன்.

நிறைய மரங்கள் ஆனால் அனைத்திலும்   பழமில்லை
நிறைய பழங்கள் ஆனால் அனைத்தும் உண்பதற்கு உகந்ததில்லை
நிறைய மனிதர்கள் ஆனால் அனைவரும் அறிவு பெற்றிருக்கவில்லை
நிறைய அறிவு பெற்ற மனிதர்கள் ஆனால் அவர்கள் அறிவு அடுத்தவர்களுக்கு பயனளிப்பதில்லை
உண்ண உகந்த பழம் ,உயர்ந்த பகிர்ந்தளிக்கப்பட்ட அறிவு உயர்ந்தது

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
- குர்ஆன் -3:190.

உங்கள் சரிதம் சொல்லுங்களேன் . எங்கு, எதுவரை, எதில் ஆர்வம் கவிதை எழுத உந்தப்பட்டது . இவையெல்லாம் சுய விளம்பரமோ, சுய விமர்சனமோ, சுயசரிதை என்று தயக்கம் வேண்டாம் .சொல்வதை அழகுபட சொல்வதில் உங்களுக்கும் மகிழ்வு. அடுத்தவருக்கும் ஒரு தூண்டுதல் .உங்கள் அறிவு பரவலாக்கப் படவேண்டும் . நீங்கள் ஒரு சிறந்த மார்க்கப்பற்றுள்ள குணம்முள்ள எழுத்தாளர்,கவிஞர் ,அனைத்துக்கும் மேல் அனைவராலும் நேசிக்கப் படுபவர் .இறைவன் கொடுத்த அறிவை பகிர்ந்திடுங்கள் .'உங்களில் 'உயர்ந்தோர் தான் பெற்ற அறிவை மற்றவருக்கு ஏற்றி வைப்பவரே' - நபிமொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)."
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். புகாரி ஹதீஸ்




இறைவனது பெயரை செப்பித் துவங்கி
"ரப்பி ஜித்னி இல்மா"( رَّبِّ زِدْنِي عِلْمًا என்ற துதி பாடி
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”
யெனச் சொல்லச் சொல்ல கற்றது மனதில் பதியும்
பெற்ற அறிவு பொறுமையைத் தரும்
ஆணவம் அடங்கி மங்கிப் போகும்

இறைவனைத் தொழு
இருலோகப் பயனைப் பெரு

----------------------------------------------------------------------------------------------
குர்ஆன் 2:32.  “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்;

குர்ஆன் 20:114   فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ ۗ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَىٰ إِلَيْكَ وَحْيُهُ ۖ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا

குர்ஆன் 20:114. ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
Source : http://www.tamililquran.com/

2 comments:

  1. /// 'உயர்ந்தோர் தான் பெற்ற அறிவை மற்றவருக்கு ஏற்றி வைப்பவரே' ///

    சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன் கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete