Sunday 25 January 2015

உலகமே வியந்து நிற்க உம் மார்க்கத்தை பின் பற்றுவோர் வியக்க வில்லை

அரசனாய் இருந்தாய் இவ்வுலகில்
ஆட்டி வைத்தாய் நாட்டின் நலன் கருதி
அதிகாரம் செய்தாய் மக்களின் உயர்வு நாடி
உயிர் உன்னை விட்டு நீங்க
உமது விருப்பப் படி
அமைதியாக அடக்கி வைத்தனர் புதை குழிக்குள்
அதைத்தான் நீயும் விரும்பினாய்
அதைதான் உன் மார்க்கமும் உனக்கு போதித்தது

உம்மை அடக்கிய விதம் காண உலகமே வியந்து நிற்க
உம் மார்க்கத்தை பின் பற்றுவோர் வியக்க வில்லை
உம்மை அடக்கிய விதத்தில் மார்க்கத்தின் முறை இருப்பதால்
எத்தனையோ ராஜாக்களும் ,நாட்டை ஆள்பவர்களும் வந்திருக்கக்கூடும்
அவர்கள் வரவேண்டுமென நீங்கள் யாரும் காத்திருக்க வில்லை
ஆனால் எங்களில் இறந்த உடலை சிலர் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து வெளிநாட்டிலிருந்து ஒருவர் வருகைக்காக காத்திருந்து அடக்கம் செய்ய பல மணி நேரங்கள் இறந்தவருக்காக தங்களையும் வருத்திக் கொள்வது வேதனைதான்

No comments:

Post a Comment