Showing posts with label ஆண். Show all posts
Showing posts with label ஆண். Show all posts

Sunday, 17 November 2013

பெண் என்றால் பேயும் நடுங்கும்

பெண் என்றால் பேயும் நடுங்கும்
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண் என்றால் பேயும் மயங்கும்
பேய் என்றால் பெண்ணும் பயப்படுவாள்
பேய் என்றால் வக்கிரம் கொண்ட(காம வெறியன்கள்)ஆணாவான்

பேய் என்பது பொய்யானாலும்
பேய் என்பது அச்சம் தரக் கூடியதற்கு உருவகப் படுத்தப் படும்

வக்கிர புத்தி இருபாலர்களுக்கும் உண்டு
அதனால்தான் ஆண் பேய், பெண் பேய் என்கிறார்களோ!

Saturday, 31 August 2013

அழகே உன்னை நேசிக்கிறேன்


அழகு மனதை சார்ந்தது .ஆழகைக் கண்டு ஆனந்தமடைவது மனித இயல்பு
ஒருவர் விரும்பும் அழகு மற்றவருக்கு அழகற்றதாக காட்சி தரலாம்
அனைவராலும் விரும்பும் அழகாக காட்சித் தருவது பெண்ணின் அழகு

ஆண் பெண்ணைப் போன்று அழகாக இருப்பதில்லையா !
கவிஞர்கள பெண்களின் அழகை கவிதைகளாக தருகிறார்கள்
பெண் கவிஞர்கள ஆண்களின் அழகை கவிதைகளாக தருவதில்லை
ஆண் கவிஞர்கள பெண்களின் அழகை கவிதைகளாக தந்தால் பாராட்டுகிறார்கள்
பெண் கவிஞர்கள ஆண்களின் அழகை கவிதைகளாக தந்தால் அதனை பார்க்கும் கண்ணோட்டம் மாறுபடுகின்றது.

கண்களின் காட்சிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறு படுகிறதோ !
தடை போடப் படுகிறதோ !.தடை அற்ற நிலை போனால் கேடு கெட்ட அழகற்ற நிலையாகி விடுமோ!
உலகம் அழகின் இச்சையால் சுழல்வது நியதி .
இதில் ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்கு ஒரு நியதி ஏன் !

Sunday, 7 July 2013

ஆணை அறிய! - பெண்ணை புரிய!

பொது சமன்பாடுகள் & புள்ளியியல்

ஒரு பெண் கணவன் வரும் வரை  எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறாள்
ஒரு மனிதன் மனைவி கிடைத்த பின்பு  எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறான்

ஒரு வெற்றிகரமான மனிதன் தன் மனைவி செலவிடும் அளவுக்கு  மேல் அதிகமாக பணத்தை சேர்த்தால் அவன் திறமைசாலி
ஒரு மகிழ்வான பெண் தன் கணவன் தன் செலவிற்கு அதிகமாக சேர்த்தால் அவள் அதிர்ஷ்டக்காரி
======================================================
நீண்ட ஆயுள்

ஒரு ஆண்  இருபது ரூபாய்  கொடுத்து பத்து தேவையான பொருளை வாங்குவான்
ஒரு பெண் பத்து ரூபாய்  கொடுத்து இருபது தேவையற்ற பொருளை வாங்குவாள்

திருமணமான மனிதன் மணமாகாதவனைக் காட்டிலும் நெடுநாள் வாழ்வான்
திருமணமான மனிதன் நெடுநாள் வாழ விரும்புவதில்லை
திருமணமாகாதவன் நெடுநாள் வாழ நீண்ட ஆயூளை விரும்புவான்
திருமண பெண் வாழும் ஆண்டுகள் குறைவு ஆனால் வாழ விரும்புவாள்

==========================================================
சந்தோஷம்

ஒரு மனிதனோடு மகிழ்வாக வாழ அவனைப்  புரிந்துக் கொண்டு சிறிது நேசம் கொண்டால் போதும்'
ஒரு பெண்ணோடு மகிழ்வாக வாழ அதிகமாக நேசம் கொண்டு சிறிது புரிந்துக் கொண்டால் போதும்
=============================================

Tuesday, 18 June 2013

நதியும் மக்களும் உருவாக்கிய பிரிவுகள்

நதியும் மக்களும் உருவாக்கிய பிரிவுகள்


ஒன்றாக வந்த வற்றாத ஜீவ நதி வளமாக ஆற்றின்  வழி நீர் பெருக்கெடுத்தோடி பல வாய்க்கால்களாக பிரிந்து ஆங்காங்கே உள்ள இடங்களை செழிக்கச் செய்து மக்களுக்கு நன்மை பயக்கின்றது.

ஓடிக்கொண்டேயிருக்கும் ஜீவ நதிக்கு ஓயவில்லை களைப்பில்லை ,ஜீவனாம்சமும் தேவையில்லை,இளைப்பாற இடமும் தேவையில்லை   அதுக்கு தேவை மழை .
   
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே புசியுமாம், தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை - ஒளவையார்

ஆணாக ,பெண்ணாக தனியே வந்த மனித படைப்பு ஒற்றுமையாக ஒன்றிணைந்து அதன் பலனால் பல் மக்களாக பெருகி தன்னை சீர் படுத்திக் கொள்ள ஒரு மார்கத்தை கண்டு அதன் வழியே நல்வழி பெற்றோர் தனக்குள் பல ஜாதி ,மதமென பல பிரிவுகளாக்கிக் கொண்டு தன்னையும் அழித்து மக்களுக்கு தீமை பயக்கின்றனர்.


ஆணுக்கு தேவை பெண் வளமாக வாழ.
ஆண்சாதிக்கு தேவை பெண்சாதி

ஆணுக்கு தேவை பெண் வளமாக வாழ

 "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதிவழுவா நெறிமுறையில் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

பட்டாங் கிலுள்ள படி. " - அவ்வையார்