Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Tuesday, 13 May 2014

உன்னை படைத்த பின்தான் இறைவன் கால நிலையை படைத்தானோ !

பெண்ணே நீ அழகு
உனக்குள் அனைத்து கால நிலையும் அடக்கம்
சூடாகவும் இருப்பாய்
குளிராகவும் இருப்பாய்
வசந்தமாகவும் இருப்பாய்
தென்றலாய் தவழ்வாய்
உன்னை படைத்த பின்தான்
இறைவன் கால நிலையை படைத்தானோ !

பெண் கவர்சிகரமானவள்
பெண் பாலுணர்ச்சியைத் தூண்டுபவள்
பெண் தாயாக குழந்தைக்கு பால் தருபவள்
பெண்ணின் பால் தருமிடமே
பெண்ணுக்கு கவர்ச்சியைத் தருமிடமாகப் போனது

Sunday, 17 November 2013

பெண் என்றால் பேயும் நடுங்கும்

பெண் என்றால் பேயும் நடுங்கும்
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண் என்றால் பேயும் மயங்கும்
பேய் என்றால் பெண்ணும் பயப்படுவாள்
பேய் என்றால் வக்கிரம் கொண்ட(காம வெறியன்கள்)ஆணாவான்

பேய் என்பது பொய்யானாலும்
பேய் என்பது அச்சம் தரக் கூடியதற்கு உருவகப் படுத்தப் படும்

வக்கிர புத்தி இருபாலர்களுக்கும் உண்டு
அதனால்தான் ஆண் பேய், பெண் பேய் என்கிறார்களோ!

Saturday, 19 October 2013

பெண்ணே நீ செய்த குற்றமா !

மாதவிடாய் வந்து ஒதுங்கி நிற்கிறாய்

மலடியாய் பிள்ளை பெறாமல் இருக்கிறாய்

கர்பினியாய் காலம் நிர்ணயிக்கிறாய்

பிரசவமாகி காமப் பசி கணவனை காய வைக்கிறாய்

கணவன் விடுத்து அடுத்தவன நேசிக்க வெறுக்கிறாய்

அழைத்த நேரத்தில் அயராது வேலை செய்த களைப்பில் உறங்குகிறாய்

அழகாக இருக்க அடுத்தவர் மனதை கொள்ளை கொள்கிறாய்

அடுத்தவர் காண அழகை மறைக்க ஆவன செய்கிறாய்

கணவனைக் காண அழகை அழகு படுத்துகிறாய்

Saturday, 31 August 2013

அழகே உன்னை நேசிக்கிறேன்


அழகு மனதை சார்ந்தது .ஆழகைக் கண்டு ஆனந்தமடைவது மனித இயல்பு
ஒருவர் விரும்பும் அழகு மற்றவருக்கு அழகற்றதாக காட்சி தரலாம்
அனைவராலும் விரும்பும் அழகாக காட்சித் தருவது பெண்ணின் அழகு

ஆண் பெண்ணைப் போன்று அழகாக இருப்பதில்லையா !
கவிஞர்கள பெண்களின் அழகை கவிதைகளாக தருகிறார்கள்
பெண் கவிஞர்கள ஆண்களின் அழகை கவிதைகளாக தருவதில்லை
ஆண் கவிஞர்கள பெண்களின் அழகை கவிதைகளாக தந்தால் பாராட்டுகிறார்கள்
பெண் கவிஞர்கள ஆண்களின் அழகை கவிதைகளாக தந்தால் அதனை பார்க்கும் கண்ணோட்டம் மாறுபடுகின்றது.

கண்களின் காட்சிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறு படுகிறதோ !
தடை போடப் படுகிறதோ !.தடை அற்ற நிலை போனால் கேடு கெட்ட அழகற்ற நிலையாகி விடுமோ!
உலகம் அழகின் இச்சையால் சுழல்வது நியதி .
இதில் ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்கு ஒரு நியதி ஏன் !

Tuesday, 18 June 2013

நதியும் மக்களும் உருவாக்கிய பிரிவுகள்

நதியும் மக்களும் உருவாக்கிய பிரிவுகள்


ஒன்றாக வந்த வற்றாத ஜீவ நதி வளமாக ஆற்றின்  வழி நீர் பெருக்கெடுத்தோடி பல வாய்க்கால்களாக பிரிந்து ஆங்காங்கே உள்ள இடங்களை செழிக்கச் செய்து மக்களுக்கு நன்மை பயக்கின்றது.

ஓடிக்கொண்டேயிருக்கும் ஜீவ நதிக்கு ஓயவில்லை களைப்பில்லை ,ஜீவனாம்சமும் தேவையில்லை,இளைப்பாற இடமும் தேவையில்லை   அதுக்கு தேவை மழை .
   
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே புசியுமாம், தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை - ஒளவையார்

ஆணாக ,பெண்ணாக தனியே வந்த மனித படைப்பு ஒற்றுமையாக ஒன்றிணைந்து அதன் பலனால் பல் மக்களாக பெருகி தன்னை சீர் படுத்திக் கொள்ள ஒரு மார்கத்தை கண்டு அதன் வழியே நல்வழி பெற்றோர் தனக்குள் பல ஜாதி ,மதமென பல பிரிவுகளாக்கிக் கொண்டு தன்னையும் அழித்து மக்களுக்கு தீமை பயக்கின்றனர்.


ஆணுக்கு தேவை பெண் வளமாக வாழ.
ஆண்சாதிக்கு தேவை பெண்சாதி

ஆணுக்கு தேவை பெண் வளமாக வாழ

 "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதிவழுவா நெறிமுறையில் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

பட்டாங் கிலுள்ள படி. " - அவ்வையார்

Sunday, 7 April 2013

பெண்கல்வியின் அருமை

 பெண் குழ்ந்தை வேண்டாம் என்ற காலம் மறைந்து வரும் காலம். அதற்கு முக்கிய காரணமாய் இருப்பது ஆண் மகனுக்கு திருமணம் செய்விக்க பெண் கிடைப்பது முன் மாதிரி இப்பொழுது அவ்வளவு எளிதாக இல்லை.முன்பெல்லாம் வரதட்சணை கொடுமை வாட்டி எடுத்தது. தம்பதிகளுக்குள் உறவு முறை சரியாக இல்லையென்றாலும் அடங்கிப் போகும் கட்டாயம். கணவன் இறந்தாலோ அல்லது மணமுறிவு நிகழ்ந்தாலோ பெண்ணின் நிலை சீரழிந்த நிலை. மறுமலர்ச்சி காலத்தில் அடியெடுத்து வைத்து விட்டோம் . அவசியமானால் மறுமணமும் வந்துவிட்டது மற்றும் வரதட்சணை கொடுமையும் ஒழிந்து வருகின்றது. எங்கு போய் பெண் கேட்டாலும் ஆண் மகன் என்ன படித்திருக்கிறார்? என்ன வருமானம் அவருக்கு வருகிறது? குடும்ப கௌரவமானதா இப்படி அலசுகிறார்கள்!
பெண் படித்துக் கொண்டிருக்கிறாள் அதனால் அவள் படிப்பு முடிந்துதான் திருமணம் செய்ய விருப்பம், இன்னும் சிலர் படித்தபின் அவளுக்கென்று உள்ள வேலையை தொடர்வாள் அதற்கு ஒத்து வருவதாக இருந்தால் பார்ப்போம். சில இடங்களில் பெண்ணே தனக்கு தேவையான கணவன் தகுதியுடையவனா? என்பதில் கவனம் செலுத்தும் ஆற்றல்

பெண்ணின் படைப்பு உயர்வானது

பெண்ணின்றேல் நாமில்லை
பெண்ணாக வந்தால் அம்மா
பெண்ணால் வந்த உறவுகள் நீடிக்கும்
பெண்ணால் வாரிசுகள் வளரும்
பெண்ணின் பணிவிடை பாசமானது
பெண்ணின்  பணிவு இயல்பானது
பெண்ணிடம் கணிவு மேன்மையானது
பெண்ணின் ஊக்குவித்தல் ஆண் வெற்றிக்கு அடித்தளம்
பெண்ணின் பெருந்தன்மை ஆண்களுக்கு அமைதியைத் தருகிறது
பெண்ணின் பெருமை ஆண்களை சிறப்பிகின்றது
பெண்ணின் பெருமை மேலோங்க பார்வையை தாழ்த்திக் கொள்வார்கள்
பெண்ணின் அழகு அவர்களது உள்ளத்தில் ஆடையில் அல்ல
பெண்ணில்லா உலகில் வாழ்வேது
பெண் பெற்ற கல்வியால் குடும்பமே உயர்வடைகின்றது
பெண்ணைப் பெற்றோர் பாசத்தைக் காட்டுவார்
பெண் பிள்ளை பெறாதவர்  பரிதாபத்திற்குரியவர்..
பெண்ணின் மனது இறக்கம் கொண்டது அன்பிற்கு அடிமையாகக் கூடியது. பணிந்து பேசும் தன்மையுடையது.வெட்கத்தோடு நளினமாகப் பேசக் கூடியது.