Saturday 31 August 2013

அழகே உன்னை நேசிக்கிறேன்


அழகு மனதை சார்ந்தது .ஆழகைக் கண்டு ஆனந்தமடைவது மனித இயல்பு
ஒருவர் விரும்பும் அழகு மற்றவருக்கு அழகற்றதாக காட்சி தரலாம்
அனைவராலும் விரும்பும் அழகாக காட்சித் தருவது பெண்ணின் அழகு

ஆண் பெண்ணைப் போன்று அழகாக இருப்பதில்லையா !
கவிஞர்கள பெண்களின் அழகை கவிதைகளாக தருகிறார்கள்
பெண் கவிஞர்கள ஆண்களின் அழகை கவிதைகளாக தருவதில்லை
ஆண் கவிஞர்கள பெண்களின் அழகை கவிதைகளாக தந்தால் பாராட்டுகிறார்கள்
பெண் கவிஞர்கள ஆண்களின் அழகை கவிதைகளாக தந்தால் அதனை பார்க்கும் கண்ணோட்டம் மாறுபடுகின்றது.

கண்களின் காட்சிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறு படுகிறதோ !
தடை போடப் படுகிறதோ !.தடை அற்ற நிலை போனால் கேடு கெட்ட அழகற்ற நிலையாகி விடுமோ!
உலகம் அழகின் இச்சையால் சுழல்வது நியதி .
இதில் ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்கு ஒரு நியதி ஏன் !

No comments:

Post a Comment