கவலைப் படுவதில் கவலைபடாதே
கவலேயே மனதில் இறைவனை நிறுத்தச் செய்யும்.
மகிழ்ச்சி தன்னையும் மறந்து இறைவனையும் மறக்கச் செய்யும்
நடுநிலை தன்னிலை அறியச் செய்யும்
கவலைகள் கற்பனை வளத்தை வளர்க்கும்
கவலைகள் உந்து செய்தியை உருவாக்கும்
இவைகள் தன்னைப் பற்றி சிந்திக்கத் தெரிந்தவனுக்கு பொருந்தும்
குர்ஆனை மனனம் செய்து தொழ வைப்போர் தன்னிலை மறப்பார்
இறைவன் சிந்தனை மட்டும் அவர் மனதில்
தொழ வைக்கும் போது யாரேனும் அவர் முதுகில் குத்தினாலும் அவருக்கு அந்த வலி தெரியாது என்று ஒரு ஹாபில் சொல்லி கேள்வி
சில நேரங்களில் மழை கொட்டும்
சில நேரங்களில் மழை தூரல்களாய் விழும்
சில நேரங்களில் மேகம் அற்று வெறும் நிலை
மனதில் தோன்றும் எண்ண அலைகளுக்கும் இந்த அலை நிகழும்
Showing posts with label கவலை. Show all posts
Showing posts with label கவலை. Show all posts
Wednesday, 5 March 2014
Saturday, 29 June 2013
காலமெல்லாம் கவலை !
பணமில்லையே என்ற கவலை வந்தது
பணம் கிடைத்தும் அதை அனுபவிக்க உடல் நலமில்லையே என்ற கவலை வந்தது
திருமணம் ஆக வில்லையே என்ற கவலை வந்தது
திருமணம் ஆன பின் நாம் நினைத்தபடி மனைவி அமையவில்லையே என்ற கவலை வந்தது
திருமணம் ஆகிய பின் குழந்தை பெரும் பாகியமில்லையே என்ற கவலை வந்தது
குழந்தைகள் பெற்றும் நாம் நினைத்தபடி குழந்தைகள் படிக்கவில்லையே என்ற கவலை வந்தது
வளர்த்த செடி சிறப்பாய் வளர பாதுகாப்போடு கவணிப்போம்
மனம் மணமாய் மகிழ்ந்து மனம் வீச இறையருள் இதயத்தில் இருக்க நினைப்பதில்லை
துன்பம் வர துவளுகிறோம் .மகிழ்வு வர துள்ளுகிறோம்
இன்பத்தையும் துன்பத்தையும் சமநிலை கொண்டு மனதை சமப்படுத்திக் கொள்வதில்லை
சிறிய கவலை பெரிய கவலை வந்து மறையும் இது நியதி
மறதி என்று ஒன்றில்லையெனில் மனோவியாதி வந்து மடிவோம்
அத்தனைக்கும் மருந்து இறைவனைத் தொழுது தொடர் வேலையில் தொடர்வதே சிறப்பாக்கி வைக்கும்.
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.-- குர்ஆன் 94:5
Saturday, 22 June 2013
Subscribe to:
Posts (Atom)


+at+the+time+f+Conquering+Makkah...+He+is+So+humble......jpg)