Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Wednesday, 26 March 2014

தேர்தல் வருது! சிந்தித்து செயல்படு !

தேர்தல் வருது
தேர்தலில் நிற்கும் வாக்காளர் வருவார்கள்
தேர்தலில் நிற்கும் வாக்காளர் தாங்கள் செய்யப் போகும் செயல்பாடுகளை விளக்குவார்கள்
தேர்தலில் நிற்கும் வாக்காளர் பற்றிய குணாதியங்களை அவர்கள் முகத்தில் அறிய முடியவில்லை
தேர்தலில் நிற்கும் வாக்காளர் பற்றிய குணாதியங்களை பற்றிய மற்றும் அவர் சார்ந்த கட்சியைப் பற்றி முகநூலில் விலா வாரியாக வசைபாடியும் வாழ்த்துப் பாடியும் பலவகையான கருத்துரைகளை தந்துள்ளார்கள்.
முகநூல் நண்பர்களும் மற்றும் தேர்தலில் நிற்கும் வாக்காளர்ளும் கொடுக்கும் வாக்கு உறுதிகளும் படித்தவுடன் ,கேட்டவுடன் கனவு கலைவது போல் காணாமல் போய் விட்டது
நான் கொண்ட உறுதி என்னுள்ளே அடக்கம்
என் மனமே எனக்கு வழிகாட்டி
கடந்த காலத்தில் நான் பெற்ற அனுபவங்களும் ,ஆதாயங்களும் எனக்கு வழிகாட்டும்

Saturday, 22 March 2014

தேர்தல் வந்தால்....

தேர்தல் வந்தால் அறிஞர்கள் அறிவை அடமானம் வைக்கிறார்கள்
தேர்தல் வந்தால் துண்டுகளையும் துட்டுகளையும் மாற்றிக் கொள்கிறார்கள்

இனங்கள்,ஜாதிகள் கண்டு அறியப் படுகின்றன
வாக்குச் சீட்டுகள் வாக்குகள் கொடுத்து வாங்கப் படுகின்றன

அமானிதமாக புதிய வாக்குகள் பதிவேட்டில் பதியப் படுகின்றன
அமானிதமாக கொடுத்த பழைய வாக்குகள் மறந்து மறைந்து போகின்றன

எந்த மனிதன் என் சமுதாய விவகாரங்களுக்குப் பொறுப்பேற்‍றுக் கொண்டு பின்னர் அவர்களைக் கவலைகளிலும், துன்பங்களிலும் மூழ்கடிக்கிறாரோ அந்த மனிதரின் வாழ்க்கையை இறைவா நீயும் நெருக்கடிக்குள்ளாக்குவாயாக. எந்த மனிதர் சமுதாய விவகாரங்களுக்குப் பொறுப்பேற்‍றுக் கொண்டு பின்னர் மக்களிடம் பாசத்துடனும், பரிவுடனும் நடந்து கொண்டாரோ அவரின் மீது இறைவா நீயும கருணை புரிவாயாக. அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)

Saturday, 19 October 2013

தொடங்கி விட்டது பரபரப்பு !

தேர்தல் வந்துவிட்டது
தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்
தொடங்கி விட்டது பரபரப்பு
தொகுதிக்கு சரியான வேட்பாளர் இல்லை

வேட்பாளர் மீது உடன்பாடு இல்லை
வேறு வழி இல்லை
வாக்கு கொடுத்து விட்டேன்
வாக்கு சீட்டு போட வேண்டும்

மறந்து போன மதத்தை நினைவு படுத்தினார்
மறந்து போன இனத்தை சீண்டி விட்டார்
இனம் வாழ ஜாதி நிலைக்க இனவெறி வர
மறைவாய் மனதில் ஏற்றி வைத்தார் வேட்பாளர்