Saturday 22 March 2014

தேர்தல் வந்தால்....

தேர்தல் வந்தால் அறிஞர்கள் அறிவை அடமானம் வைக்கிறார்கள்
தேர்தல் வந்தால் துண்டுகளையும் துட்டுகளையும் மாற்றிக் கொள்கிறார்கள்

இனங்கள்,ஜாதிகள் கண்டு அறியப் படுகின்றன
வாக்குச் சீட்டுகள் வாக்குகள் கொடுத்து வாங்கப் படுகின்றன

அமானிதமாக புதிய வாக்குகள் பதிவேட்டில் பதியப் படுகின்றன
அமானிதமாக கொடுத்த பழைய வாக்குகள் மறந்து மறைந்து போகின்றன

எந்த மனிதன் என் சமுதாய விவகாரங்களுக்குப் பொறுப்பேற்‍றுக் கொண்டு பின்னர் அவர்களைக் கவலைகளிலும், துன்பங்களிலும் மூழ்கடிக்கிறாரோ அந்த மனிதரின் வாழ்க்கையை இறைவா நீயும் நெருக்கடிக்குள்ளாக்குவாயாக. எந்த மனிதர் சமுதாய விவகாரங்களுக்குப் பொறுப்பேற்‍றுக் கொண்டு பின்னர் மக்களிடம் பாசத்துடனும், பரிவுடனும் நடந்து கொண்டாரோ அவரின் மீது இறைவா நீயும கருணை புரிவாயாக. அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)

No comments:

Post a Comment