Saturday 19 October 2013

தொடங்கி விட்டது பரபரப்பு !

தேர்தல் வந்துவிட்டது
தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்
தொடங்கி விட்டது பரபரப்பு
தொகுதிக்கு சரியான வேட்பாளர் இல்லை

வேட்பாளர் மீது உடன்பாடு இல்லை
வேறு வழி இல்லை
வாக்கு கொடுத்து விட்டேன்
வாக்கு சீட்டு போட வேண்டும்

மறந்து போன மதத்தை நினைவு படுத்தினார்
மறந்து போன இனத்தை சீண்டி விட்டார்
இனம் வாழ ஜாதி நிலைக்க இனவெறி வர
மறைவாய் மனதில் ஏற்றி வைத்தார் வேட்பாளர்

வேத நூல் கற்றவர் முதலில் வாழ்வு நெறியை கற்பித்தார்
வேத நூல் முதலில் கற்று முறையான வாழ்வு வந்தது
வேத நூல் நேர்மையை அன்பை போதித்து சிறப்பானது
வேத நூல் கற்கா வேற்பாளர் இனவெறியை தூண்டுகின்றார்

இதுவரை எப்பொழுதும் இருந்ததில்லை
இனியும் இப்படித்தான் இருக்குமா தெரியவில்லை
துடிக்கும் நெஞ்சோடு இல்லாததை சொல்லி இனவெறி பரப்புகின்றார்
இனிக்கும் இத்தமிழ்நாட்டை துயரத்தில் நிறுத்தி வைக்க துடிகின்றார்

வேண்டுமா இந்த தேர்தல் யென மனம் பேதளிகின்றது
நல்லோர் நாடாள வர மறுக்கின்றார்
நல்லோர் நாடாள வர வாக்கை போட வர மறுக்கின்றார்
வேண்டும் நல்லோர் நாடாள வர வேண்டும்

மற்றவரை நம்பி வாழும் நிலை மாற வேண்டும்
மற்றவர் கொடுக்கும் அறிவு உயர்வாய் இருத்தல் வேண்டும்
மற்றவர் கொடுக்கும் தரும் இனாமை வாங்கி வாக்கு போடும் நிலை மாற வேண்டும்
மற்றவருக்கு வெறியை தூண்டும் நிலை மாற வேண்டும்

No comments:

Post a Comment