Showing posts with label மின்சாரம். Show all posts
Showing posts with label மின்சாரம். Show all posts

Wednesday, 5 March 2014

கணினி விதவையாய் வாழ்வை இழந்து நிற்கிறது

ஓர் அறையில் அமைதியாய் கணினியில் கண்ட உலகம் மறைந்து போனது
ஓராயிரம் கோடி செலவு செய்து ராக்கட்டை விடுகின்றனர்

ஒளியை, நீரை கொடுக்க முடியாமல் பெருமை பேசுகின்றனர்
ஒளி கொடுக்க நீர் கொடுக்க தொழில் செய்கின்றனர்

செய்யும் தொழிலிலும் தேவையற்ற ஊழல்
சேவை செயயவே வந்தோர் செயலற்று நிற்கின்றனர்

Friday, 24 May 2013

எங்கே நிம்மதி நிலையற்ற மின்சாரத்தால்!

மனிதன் வாழ்வில் ஏற்றம் இறக்கம் கண்டேன்
இறக்கம் காண இரக்கம் கொண்டேன்

மின்சாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்டேன்
மின்சாரத்தின் மீது வெறுப்பைக் கொண்டேன்

எங்கே நிம்மதி நிலையற்ற மின்சாரத்தால்
நெட்டே  கழண்டு போச்சு பிடியற்ற கரண்டால்

மின்சாரம் பாய்ச்சும் மின்சாரம் முறையற்றதாய் போகக் கண்டேன்
சம்சாரம் பாய்ச்சும் மின்சாரம் முறையாக இருக்கக் கண்டேன்

மின்சாரம் வேண்டாம் சம்சாரம் போதும்
சம்சாரம்தான் சமாசாரத்திற்கு சரிபட்டு வரும் 

Monday, 13 May 2013

சமைக்க தெரியாது. ஆனால் சமைத்ததனை சுவைக்க தெரியும்.

இனாம் அல்லது  தர்மம் ஒரு நன்மையான செயல்.

இனாம் பெறுவது விரும்பத் தகாத செயல்

இனாம் கொடுப்பது உயர்த்த செயல்

(ஒளவையார் ஐயமிட்டு உன் என்றும் சொல்கிறார். ஏற்பது இகழ்ச்சி என்றும் சொல்கிறார்.)

இனாமும் அன்பளிப்பதும் ஒன்றாகாது .

இனாம் கொடுப்பவரும் அன்பளிப்பு கொடுப்பவரும் விரும்பி செயல்படும் முறை. இரண்டும் மகிழ்வைத் தரும்.

இனாம் வாங்குபவர் தாழ்ந்த நிலையில் உள்ளவர் . தாழ்ந்த நிலையில் உள்ளவரும் இனாம் கொடுக்கும் மனம் படைத்தவராகவும் ,இறக்கம்  உள்ளவராகவும் இருக்கலாம் .

இப்பொழுது உள்ள நிலை இனாமுக்கு ஆதாயம் தேடும் நிலைக்கு மாறிவிட்டது .