Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts

Sunday, 9 March 2014

மனிதனின் மாற்றமும் மனதளவில் ஏற்புடையதே !

தீவில் ஒருவன் தனியே இருக்க முடியாது .
தீவாக இருந்தாலும் பார்க்க முகம் வேண்டும் .அந்த முகம் மிருகத்தின் முகமானாலும் அதனுடன் மனிதன் நட்பை நாடுவான்.
முகமும் ,உருவமும் உள்ளத்தை விட உயர்வாகின்றது தனித்து விடும்போது.
முகம் மனிதனின் உணர்வுகளை காட்டும் .
மகிழ்வான முகங்கள் மற்றவர்களயும் மகிழ்விக்கும் .
மிருகமாய் இருந்தாலும் நம் முக மலர்ச்சி மிருகத்திற்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும் .

சமுதாயத்தின் ஒரு அங்கமே தனி மனிதன்
சமுதாயத்தின் உயர்வு தனி மனிதனையும் உள்ளடக்கியதுதான்
கொள்கைகளும் பிரிவுகளும் சமுதாயத்தின் மாற்றங்களை உருவாக்குகின்றன.
இனமும் ,மதமும் ஏற்றத் தாழ்வுகளை குறைக்க முடிவதில்லை
இல்லாதவனும் இருப்பவனும் ஒன்றிப் போவதுமில்லை
உள்ளத்தின் உணர்வுகளை முகம் காட்டி விடுகின்றது
முகத்தின் மாற்றங்கள் போல் சமுதாய மாற்றங்கள் வருவது இயல்பு
முக மாற்றம் வருவதால் நாம் முகத்தை மாற்றிக் கொள்ளவோ ,சிதைத்து விடவோ விரும்புவதில்லை
சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழும் போது சமுதாயத்தையே சிதைக்க முற்படுவதில்லை

Monday, 13 May 2013

சமைக்க தெரியாது. ஆனால் சமைத்ததனை சுவைக்க தெரியும்.

இனாம் அல்லது  தர்மம் ஒரு நன்மையான செயல்.

இனாம் பெறுவது விரும்பத் தகாத செயல்

இனாம் கொடுப்பது உயர்த்த செயல்

(ஒளவையார் ஐயமிட்டு உன் என்றும் சொல்கிறார். ஏற்பது இகழ்ச்சி என்றும் சொல்கிறார்.)

இனாமும் அன்பளிப்பதும் ஒன்றாகாது .

இனாம் கொடுப்பவரும் அன்பளிப்பு கொடுப்பவரும் விரும்பி செயல்படும் முறை. இரண்டும் மகிழ்வைத் தரும்.

இனாம் வாங்குபவர் தாழ்ந்த நிலையில் உள்ளவர் . தாழ்ந்த நிலையில் உள்ளவரும் இனாம் கொடுக்கும் மனம் படைத்தவராகவும் ,இறக்கம்  உள்ளவராகவும் இருக்கலாம் .

இப்பொழுது உள்ள நிலை இனாமுக்கு ஆதாயம் தேடும் நிலைக்கு மாறிவிட்டது .

Monday, 6 May 2013

உங்களை அறிய மற்றவர்களை அறிந்துக் கொள்ளுங்கள்

 நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும்  பின்பற்றுபவன் .நான் பேஸ் புக்கில் நல்ல நண்பர்களைப்  பெற்றுள்ளேன் நான் அனைவரையும் நேசிக்க மற்றும்  யார் விரும்பினாலும் தடையில்லாமல் நண்பர்களாக  ஏற்றுக் கொள்ள விரும்பினாலும் ஏற்றுக் கொள்கின்றேன்  இந்தியாவில்தான் மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்கின்றனர் அதில் தமிழ்  நாடும் விதிவிலக்கல்ல. இது மிகவும் வருந்த வேண்டிய செய்தி.எத்தனை மதங்கள் ஜாதிகள் அவர்களுக்குள் போராட்டங்கள்!

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
-குரான் 109:6.

ஒரு நபித்தோழராகிய சஹாபி நாயகத் திருமேனியை நோக்கி, ‘நம் இனத்தின் மீது பற்றுக் கொள்வது, அதிலும் தீவிரமான பற்றுக் கொள்வது தவறா?’ என வினாத் தொடுத்தார். இவ்வினாவுக்கு விடை கூற வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ‘ஒருவர் தன் இனத்தின்மீது பற்றுக்கொள்வது இயற்கை. அது பற்றாக மட்டுமே வளர்ந்து வளமடைய வேண்டுமேயல்லாது, வெறியாக மாறிவிடக் கூடாது’ என்றார்கள்.

 உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.என் மார்க்கம் எனக்கு உயர்ந்தது. நேசிப்பதற்கும் கருத்து வேறுபாடுகளுக்கும்  நட்பில் எந்த காலத்திலும் மோதல் வரக்கூடாது . நாம் பெரியார் ,அண்ணா ,நேரு மற்றும் பலர்  கொண்டிருந்த கொள்கை நம்மிடமிருந்து மாறு பட்டிருந்தாலும் அவர்களது   உயரிய எழுத்துக்களை கருத்துகளை    விரும்பி  படிக்கின்றோம்.அதில் நமக்கு கட்டாயம் உடன்பாடு இருக்க வேண்டும்   என்ற அவசியமில்லை.

Wednesday, 10 April 2013

அற வழியில் ஆசைப்பட்டு அடுத்த அடி தொடரு...

ஆசை வேண்டும் அது நிறைவேற வேண்டும்
ஆசை வேண்டும் அது நிறைவேற வழி தேட வேண்டும் .
ஆசை வேண்டும் அது பேராசையாக இருக்காமல் இருத்தல் வேண்டும்
ஆசை வேண்டும் அடுத்தவர் பொருளை அபகரிக்காமல் இருக்கும் நிலை வேண்டும்
ஆசை வேண்டும் விரும்பிய பொருள்  தனக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காமல் இருக்க வேண்டும்
ஆசை வேண்டும் அது ஆண்டவன் அருளை நாடி இருத்தல் வேண்டும்
ஆசை வேண்டும் அது நிராசையானால் மனம் தளரா உள்ள உறுதி வேண்டும்
ஆசை உண்டாக்கி ஏமாற்றும் மனம் பெறாத ஆசை வேண்டும்

ஆசைப் படுவது மனித இயல்பு .ஆசையற்றோர் முன்னேற்றம் அடைய வழியேது.
ஆசையற்றோர் நிலை தேக்கம் காணும் .ஆசை துன்பத்தை வரச் செய்யும் என்போர் வாழ்கையை விளங்கிக் கொள்ளாதவர். தனி மரம் தோப்பாகாது .தனித்து வாழ விரும்புவோர் தனித்து விடப்படுவார் . அது அவருக்கும் பயன்தராது அவரால் மற்றவரும் பயனடைய மாட்டார் .
ஆசைப்பட்டதால் சமுதாயம் வளர்ந்தது. ஆசை உள்ளத்தோடு இளவயதிலேயே தொடங்கியது. முதல் மனிதர் ஆதம் அவ்வா மேல் ஆசை கொள்ள வைத்தது இறைவனின் நாட்டம் . அது முதல் தொடங்கிய காதலின் ஆசை உலகம் இருக்கும் வரை நீடிக்கும் அதனால் சமுதாயம் பெருகும் .
மரணிப்பதை நேசிக்காதே ,கொள்கைக்காக உயிரை மாய்த்துக் கொள்வது,தற்கொலையை
நாடுவது பலவீனத்தின் அறிகுறி. கொள்கை மீது நம்பிக்கை அற்ற நிலை.
நம்பிக்கை இல்லாத கொள்கை விரயம். கொள்கை .உயர்வானதாக இருத்தல் அவசியம். நினைத்ததை முடிக்கும் வரை நம்பிக்கையை நிலை நிறுத்தி போராடு. அதற்கு வாழ்வை நாடு. .நினைப்பது நடந்தே தீரும் என்ற நம்பிக்கை வேண்டும் அது வரும்போது வரட்டும் .கொள்கை பிடிப்பும் அந்த கொள்கை உயர்ந்த கொள்கையாக மட்டும் இருப்பது மிகவும் அவசியம்