Sunday 8 December 2013

சொல்லிவிட்டேன் !

என்
மனதுக்குள்
அழுத்தி வைத்ததை
என்னை அறியாமல்
சொல்லிவிட்டேன்.
சொல்லிவிட்டதை
எண்ணி
என் மனம் பதைக்கிறது

நெஞ்சில் உள்ளதை
நெடுநாள் நிறுத்தி வைக்க முடியவில்லை

உன்னிடம் நான் சொல்லிவிட்டேன்
உன்னிடமே உன்னைப் பற்றியதை
ஒளிக்காமல் உன்னிடமே சொல்லிவிட்டேன்
ஒளிவு மறைவின்றி உண்மையை சொல்லிவிட்டேன்


உண்மையைச் சொன்னதால்
உயர்வை பெறுவேனா என்பதை அறியாமல்
உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டேன்
உயர்த்தி வைப்பதும் தாழ்த்தி வைப்பதும்
உன் வசம் உள்ளது என்பதை அறிந்து சொல்லிவிட்டேன்

அனைத்தும் நீ அறிவாய்
அறிந்தவனிடமே நான் சொல்லிவிட்டேன்
சொல்லியது உன்னிடம்தான்
சொல்லியதை நீ மட்டும் அறிவாய்
சொல்லியதை யாரிடமும் சொல்ல மாட்டாய்
சொல்லியது உன் அருள் நாடி
சொன்னவருக்கும் சொல்லாதவருக்கும் அருள் செய்வாய்
சொல்லிய எனக்கும் உன்னருளை தந்துவிடு
சொல்லாமல் இருந்தமைக்கு மன்னிப்பை வழங்கி விடு

1 comment: