Friday 20 December 2013

விதி

விதியில்லாதது ஏது
வீதிக்கும் விதியுண்டு
வாழ்விற்கும் விதியுண்டு
சட்டத்திற்கும் விதியுண்டு
மனிதன் போடும் சட்டத்தின் விதியை
மனிதன் நாடும் விதத்தில் மதியால்  மாற்றலாம்
இறைவன் விதித்த விதியை மாற்ற
இறைவனால்தான் முடியும்

இறைவனது விதியை ஆய்வோர்
இரண்டு கால்களையும் தூக்கி முயல்வோர் ஆவார்

நல்லதும் கெட்டதும் நடப்பதும் இறைவன் விதித்த விதி
நல்லது நடப்பதும் நன்மைக்கே
கெட்டது நிகழ்வதும் நன்மைக்கே
கடலின் அலைகளின் நிலை
கடலால் யெழுந்த சுனாமியின் விளைவு
விழுவது விதியின் நிலை
முயல்வது நம் நிலை
முயல்வதின் முடிவு விதியின் நிலை

எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது)  - குர்ஆன் 3:112.

அலீ(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் 'சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தம் இருபபிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை' என்றார்கள்.
அப்போது மக்களில் ஒருவர் 'அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டார்.
நபி(ஸல்) அவர்கள் 'இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது' என்று கூறிவிட்டு பிறகு '(இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்' எனும் (திருக்குர்ஆன் 92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். 14
ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 6605.

1 comment:

  1. வலி என்றும் நல்லதிற்கு நல்லது வழி...

    ReplyDelete