Tuesday 13 May 2014

உன்னை படைத்த பின்தான் இறைவன் கால நிலையை படைத்தானோ !

பெண்ணே நீ அழகு
உனக்குள் அனைத்து கால நிலையும் அடக்கம்
சூடாகவும் இருப்பாய்
குளிராகவும் இருப்பாய்
வசந்தமாகவும் இருப்பாய்
தென்றலாய் தவழ்வாய்
உன்னை படைத்த பின்தான்
இறைவன் கால நிலையை படைத்தானோ !

பெண் கவர்சிகரமானவள்
பெண் பாலுணர்ச்சியைத் தூண்டுபவள்
பெண் தாயாக குழந்தைக்கு பால் தருபவள்
பெண்ணின் பால் தருமிடமே
பெண்ணுக்கு கவர்ச்சியைத் தருமிடமாகப் போனது

பழமையை போற்றி
புதுமையை நாடி

கவனத்தை செலுத்தி
கற்பதில் ஆர்வம்

வேதத்தில் விருப்பம்
நெறியில் நாட்டம்

கணிவில் இயல்பு
கடிவது நீக்கம்

காட்சியில் ஈர்ப்பு
காண்பதில்  விருப்பம்

அழகுக்கு அழகு
அணிவதில் அழகூட்டல்

விழிகளில் நீர் தேக்கம்
வேண்டியபோது நீர் கொட்டும்

புரியாத புதிர்
பெண்மையின் சிறப்பு

No comments:

Post a Comment