Thursday 31 July 2014

காதல் திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா !

திருமணத்திற்குப் பின் வரும் காதல் உயர்வானது

காதல் வெளிப்படையானதாக தூய்மையானதாக நேசத்தில் இருப்பது குறைவு
காதலில் இன ஈர்ப்புத் தன்மை மிகுந்து விடலாம்
பாலியல் திருப்தி பெற்ற பிறகு விரைவில் காமம் கலந்த காதல் கதை சில நிமிடங்களில் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது .
சோர்வும், சலிப்பும் சேர காதல் தோல்வியாக மாறுகிறது
காதலில் காமம் கலந்து விட காதலும் நேசமும் மறைந்து விடும்

காதலில் விரைவில் சந்தேகம் உதிர்வதால் கொடுமை, பொறாமை ஏற்படுகிறது.
எனவே காதலால் துன்பம், வலி வர அது கண்ணீராக மாறிவிடும்.
காதலில் இறக்கம் ,மன்னிக்கும் குணம் ,சமரசம் செய்யும் மாண்பு இல்லாமையால் காதல் வசப்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
காதலில் மிகைத்து திருமணம் செய்ய முற்பட திருமணத்திற்குப் பின் புதுமையான அனுபவங்களை அடைவது குறைவு
திருமணத்திற்குப் பின் வரும் காதல் குடும்பத்தை உருவாக்கும் மனநிலையால் உருவாகின்றதால் அதில்
இறக்கம் ,கருணை, மன்னிக்கும் குணம் ,சமரசம் செய்யும் மாண்பு மிகைத்து நிற்க நெருக்கமான பிணைப்பு நிறைந்து நிற்கின்றது

இறக்கம் தூய்மையாகி ஆழ்ந்த அன்பை தெளிவாக்கி விடுகிறது .
திருமணத்திற்குப் பின் வரும் காதல், தியாகம், சகிப்புத்தன்மை, கருணை, மன்னிப்பு நேசம் அடங்கிய கலவையாக மனித உணர்வு மேலோங்கி இருக்கிறது.

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
குர்ஆன்: 30:21.

அழகில் மயங்கிய காதல் இச்சைக்கு விருப்பமாவது தகாத செயலில் தள்ளி விடும்.

நல்லொழுக்கம் கொண்ட உயர் மனம் உடையவர் தகாத செயலில் எந்த நிலையிலும் உடன்பட மாட்டார் என்பதற்கு யூஸுஃப் நபியின் வரலாறு சிறந்த வழிகாட்டியாக உள்ளது

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) “வாரும்” என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று சொன்னார்.
குர்ஆன்:12:23.

(அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.
குர்ஆன்:12:33.

No comments:

Post a Comment