Thursday 1 May 2014

ஓதுவதை ஒருநாளும் நிறுத்த வேண்டாம்

படிக்கும் வரிகள் மறந்து போனது
படிப்பதற்கு பிரியம் குறைந்து போனது
பிரியம் குறையும் நிலையை முறையிட்டேன் அப்பாவிடம்

கரிவந்த பிரம்பு கூடையில் நீர் கொண்டு வரச் சொன்னார் அப்பா
இடைப்பட்ட தூரத்தில் கொண்டு வந்த நீர் கொட்டிப் போனது

மறுமுறையும் கொண்ட வரச் சொன்னார்
மறுமுறையும் கொண்டு வந்த நீர் கொட்டிப் போனது

அடுத்தடுத்து அதனை செய்யச் சொன்னார்
அடுத்தடுத்தும் அதே நிலையானது

அலுத்துப் போய் நின்ற போது கூடையின் மாற்றத்தை பார்க்கச் சொன்னார்
அழுக்கு நீங்கிய கூடையாக மாற்றம் வந்ததை பார்த்தேன்

ஒதுவது உயர்ந்தது
ஓதிய வரிகள் உன் நினைவிலிருந்து அகன்றுப் போகலாம்
ஓதிய வரிகளால் உன்னிடத்தில் மாற்றம் நிகழலாம்
ஓதிய வரிகளால் உன் மனதில் உள்ள அழுக்கு நீங்கும்
ஓதிய வரிகளின் உயர்வை அறிய
ஓதிய வரிகள் உன்னிடத்தில் உண்டாக்கிய மாற்றம் உயர்வாக்கி விடும்
ஓதுவது மறந்து போவதை நினைத்து
ஓதுவதை ஒருநாளும் நிறுத்த வேண்டாம்

No comments:

Post a Comment