Friday 7 June 2013

கவிதை தமிழ் வளர்க்கும் மருந்தானது


பாட நூல்களாக கவிதைகள் படிக்கும்போது வெறுப்பைத் தந்தது
தேர்வுக்காக கவிதைகள் படிக்கும்போது மறந்து போனது
படக் காட்சிகளில் கவிதைபோல் வந்தது வாய் அசைத்தது
நிகழ்வுகளை ,உணர்வுகளை மனதில் உறைய வைக்க
பாரதியும் ,பாரதிதாசனும் கவிதைகளை எளிமைப் படுத்தினர்
புதிய கவிதைகள் ஹைக்கூவாக வந்து மனதில் கொக்குப் போட்டன
கண்ணதாசன் ,கவிக்கோ, கவியரசு, மேத்தா கவிதைகள் கவின்மிகு படைப்புகளாயின
போதனையாக ,காப்பியங்களாக வந்த சங்க கால கவிதைகள் உருமாறி வந்தன
உருமாறி வரும் கவிதைகள் நகைச்சுவை, நையாண்டி, கலாய்த்தல் வகையாயின
கவிதைக்கு 'மவுசு ' கூடத் தொடங்க படக் படக்காட்சியிலும் பாடகள் வராதா யென கவிஞர்கள் விரும்ப அனைவருக்கும் கவிதை ஆசை வர கவிதைக்கே மவுசு கூடியது
பாட நூல்களாக கவிதைகள் படிக்கும்போதும் தேர்வுக்காக கவிதைகள் படிக்கும்போதும்
கவிதையாக படிப்பதிலும் ஆசை இயல்பாகவே வந்தது.
புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள் தமிழுக்கு சேவை செய்து புத்துயிர் ஊட்டுகின்றனர்
தமிழ்க் கவிதை வளர தமிழும் வளரும் தமிழரும் வளர்வர்

2 comments:

  1. எந்த விதத்திலும் தமிழ் வளரும் என்பதை அருமையாகச் சொன்னீர்கள்... பாராட்டுக்கள்...

    நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கருத்துரைக்கு நன்றி .வாழ்த்துகள் திண்டுக்கல் தனபாலன் அவர்களே

    ReplyDelete