Tuesday 8 April 2014

கலங்கிய மனமும் மகிழ்வாய் பளிச்சிட

பொய்மை அறிய அறிவு வேண்டும்
ஞானம் வர பொய்மை விலகும்
ஞானம் கிடைக்க தேடல் வேண்டும்
ஞானம் முழுமைப் பெற தொடர் முயற்சி வேண்டும்
ஞானத்தின் திறவுகோல் நாயகத்தின் வாழ்வின் வழியாகும்
ஞானம் கிடைத்து விளங்க இறை அருள் வேண்டும்
இறைவனை அறிய இறை மறை பொருள் அறிந்து ஓத வேண்டும்

அண்ணல் நாளும் செப்பிய உயர்தரு சொற்கள்
நண்ணி நாளும் நடந்திட உயர்பெரு வாழ்வெய்த
எண்ணம் யாவும் உயர்வாய் வந்திட
கலங்கிய மனமும் மகிழ்வாய் பளிச்சிட உணர்வீர்
ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..
கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா
ஞானத்தின் திறவுகோல்..

பள்ளி சென்று படிக்கவில்லை பாடம் ஏதும் கேட்கவில்லை(2)
சொல்லிதரும் தகுதி இந்த துனியாவில் எவர்க்குமில்லை (2)
அல்லாஹ்வே ஆசியுடன் அனைத்துமே ஆச்சரியம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

வானம் அதை பார்த்திருந்தார் வல்லல் நபி சிந்தித்தார்(2)
வான் மழை கடல் அலையை கண்டிரையை புகழ்ந்திட்டார்(2)
இறைவன் சொல்லி தந்தான் சாந்த நபி எழுதி கொண்டார்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

கலிமா தொழுகை நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜுடனே(2)
பழுது ஏதுமில்லாத பண்பான வாழ்க்கை முறை(2)
பகுப்புகள் நடந்தனறே வாஞ்சை நபி தொடர்ந்தனறே
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

பொருளியல் அரசியலில் புதுமை விஞ்கானமதில்(2)
அருளியல் இல்லறத்தில் ஆன்மிக வழிமுறையில்(2)
எத்துரையும் கற்றிருந்தார் ஏகன் அருள் பெற்றூயர்ந்தார்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

பண்பான நபிபெருமான் பல்கலைகழகமன்றோ(2)
அன்பான மாணவராம் அவர்வழி உம்மத்தன்றோ(2)
தேர்வினிலே வென்றிடுவோம் தீன்வழியில் நின்றிடுவோம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே
ஞானத்தின் திறவுகோல்..

ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..
ரசூல் நாயகம் அல்லவா..
கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா
ஞானத்தின் திறவுகோல்.


ஞானத்தின் திறவுகோல்.mpDownload3 
 

No comments:

Post a Comment