Sunday 27 April 2014

யாரிடமும் அறிவிப்பின்றி அணுகி விடுவாய்!

யாரும் விரும்பாத நீ
யாரிடமும் அறிவிப்பின்றி அணுகி விடுவாய்

பிறக்கும்போதே ஒட்டிக்கொண்டு பிறந்து விட்டாய்
இருப்பவரையும் சொல்லிக் கொள்ளாமல் அழைத்து விடுகிறாய்

அழைக்காத விருந்தினன்
விரும்பாத உறவினன்
வருகையை நேசிக்கவில்லை
வருகையை தடுக்க முடியவில்லை
வருகையை விரும்பவில்லையென்றாலும்
விரும்பியதுபோது அழைத்துக் கொள்வாய்

அழைத்துக் கொள்வதற்கு முன்
அறிய சேவைகள் செய்து
அறிய நன்மைகள் சேர்க்க விடு
அழைத்துச் செல்லுமிடம் உயர்வாயிருக்க வேண்டும்

முதல் ஒரு எழுத்து இங்கு இருக்க (பிறப்பில் முதல் ஒரு எழுத்து)
முதல் ஒரு எழுத்தை மாற்றி அங்கு உன்னிடம் சேர்த்துக் கொள்கிறாய்(பிறப்பு -இறப்பானது)

பிறக்கும்போதே இறக்கப் போவது உறுதி யென்பதனை மறந்தோர் கோடி
மறந்ததனால் அறிந்தே பொறுப்பற்ற வாழ்வோடு பாவமான செயல்களை செய்கின்றனர்
மறக்காதவர் அறிந்து உயர் செயல்கள் செய்து நன்மைகள் சேர்த்து
அழைத்துச் செல்லும்போது மகிழ்வாய் உன்னோடு வருகின்றனர்

நன்மை செய்தோர் தான் உன்னோடு போகுமிடம் உயர்வாய் இருக்குமென நம்பி உன்னோடு வருகின்றனர்

இறப்பையும் பிறப்பையும் தந்த இறைவா !
இருலோகத்திலும் உன்னிடமே உயர் வாழ்வை இறைஞ்சி நிற்கின்றோம்

இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்வோம்!
இறைவன் இட்ட கடமையை நிறைவேற்றுவோம்
இறைவன் கொடுத்த வாழ்வை மறைவழி வாழ்வோம்

No comments:

Post a Comment