Friday 4 April 2014

அவனுக்கென்ன அவ்வளவு அவசரம் !

மெழுகுவத்தியாய் வெளிச்சம் தந்தாய்
உன்னை வதைத்து என்னை வளர்த்தாய்
பாசத்தைக் காட்டினாய் எதையும் எதிர்பாராமல்
பாசம் உன்னோடு உருவாகியது என்னை உருவாக்கியதிலிருந்து
கண்டிக்கும் மனதிலும் கனிவு உன்னோடு ஒன்றி இருக்கும்
முறைத்துப் பார்ப்பாய் சிரித்துத் தழுவுவேன்

அழகே நீதான்
ஆனந்தம் தருவதும் நீதான்

நீ சிரித்தாலும் அழகு
நீ முறைத்தாலும் அழகு
நீ இன்றேல் அழகில்லை

தனித்து விட்டு முந்திச் சென்று விட்டாய்
நான் வளரும் காலத்தில் நீ தந்தமை
நீ முதுமை அடைந்த காலத்தில்
நான் கொடுக்க வேண்டியது கடனாய் நிற்கிறது
நீ கொடுத்ததோ நிறைவு
நான் கொடுக்காமல் விட்டதோ அதிகம்
நான் கொடுக்காமல் போனதால் கடனாய் நிற்பதாய் நினைத்து மடிகின்றேன்

அவனுக்கென்ன அவ்வளவு அவசரம்
என் கடனை தீர்க்காமல் உன்னை அழைத்துக் கொள்ள
அவனிடம் உனக்காக இறைஞ்சுகின்றேன்
விழிகளில் நீர் வடிய உனை நினைத்து ஏங்குகின்றேன்

உனை நினைத்து ஒரு வரியும் வரவில்லை
உனை நினைத்து ஒரு வரியும் எழுதி அவனிடம் இறைஞ்ச வில்லை
அவன் தந்த இறைவரிகளே உனக்கு சமர்ப்பனமாக்கி ஓதி
அவனிடம் உனக்காக இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்கின்றேன்

No comments:

Post a Comment