Monday 7 April 2014

முதுமை கால நிகழ்வுகள் ஆழ் கடலில் சிப்பிகலிருந்து கிடைத்த முத்துகள் .

முதுமை கால நிகழ்வுகள் ஆழ் கடலில் சிப்பிகலிருந்து கிடைத்த முத்துகள்  .
சில சிப்பிகளில் உயர்ரக முத்து கிடப்பதில்லை. முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது.இது இயற்கையில் நீரில் வாழு கின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங் களிலிருந்து பெறப்படுகின்றது

சில சிப்பிகளில் உயர்ரக முத்துகள் கிடைத்து விடுகின்றன
மனிதன் வாழ்ந்த முறைகளில் அவன் வாழ்வே அடுத்தவர்களுக்கு வழிகாட்டி முத்துகளாக அமையக் காணாலாம்
சிலருக்கு முதுமையான வாழ்வு  மகிழ்வாகவும் சிலருக்கு அது வருத்தம் தருவதாகவும் இருக்கிறது .
வருத்தத்தை பகிர்வதில் பகிர்பவரின் மனதிற்கு ஒரு அமைதியைத் தரலாம் .ஆனால் அதுவே பகிரப்படுபவருக்கு வருத்தத்தை தரக் கூடும்.
முடிந்தவரை வருத்தமான நிகழ்வுகளை விழுங்கி விட்டு மகிழ்வை மட்டும் கேட்பவருக்கும் மகிவைக் கொடுக்கும் வகையில்  பகிர்வது சிறப்பு.
ஒருவர் தனது வருத்தத்தை.ஆற்றாமையை ,இயலாமையை பகிரும்போது அதனைக் கேட்பவர்கள் அவருக்கு உதவி செய்ய இயலாமல் போனாலும் இரக்க மனதோடு கேட்கும்போது வருத்த மனம் கொண்டோர் மன அமைதி அடைவர் .அதனால் இருவருக்கும் நன்மையே .


ஆண்டுகள் கடக்கின்றன
அனுபவங்கள் கிடைக்கின்றன
வாழ்வில் இறப்பு வருவது உறுதி

இருக்கும் வரை முதுமை என்ற நினைவு வராமல் இருக்கும் வரை இறைவனை நினைத்து ,அவனுக்கு நன்றி செலுத்தி தொழுது உயிர் போகும் வரை இளமை நினைவோடு இருந்தால் எக்காலமும் மகிழ்வுதான்

சிந்தனயும் இளமையாக இருத்தல் உயர்வு
முதுமை காலத்திலும் காதலிக்க முடியும்
காதலை தேடி அலைய வேண்டியதில்லை
காதல் நம் மனதில் உள்ளது
உலகத்தில் அத்தனை பொருளும் காதலிக்கப் பட வேண்டியவைதான்
நம் வாழ்வையே நாம் காதலிக்க வேண்டும்
வியாதி வந்து அதனால் வரும் தொல்லைகளையும் காதலிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
வியாதிகள் மற்றும் இயலா நிலைகள் நம்மை தூய்மை படுத்த உதவுகின்றன .
இறைவனை நேசிக்க தூண்டுகின்றன
நல்லது ஒன்று இருக்க அதற்கு மாற்றமானது ஒன்று இருக்கத் தான் செய்யும்
நல்லதும் கெட்டதும் இணைந்ததே வாழ்வு

மனமே ! உன்னை நேசிக்கின்றேன் ! அனைத்தையும் சமநிலைப் படுத்தி உன்னை உயர்வாக்கிக் கொள்வதால்
படைத்தவனே பாதுகாப்பவன்
படைத்தவனே எடுத்துக் கொள்பவன்
கொடுத்தவனுக்கே அனைத்து உரிமையும்
நம் உரிமை நம்மிடத்தில் இருப்பதை உயர்படுத்தி நேசிப்பதே உயர்வு.
வாழ்க முதுமை
வளர்க முதுமை
முதுமை வர வாழ்பவன் கொடுத்து வைத்தவன்
பல்லாண்டுகாலம் வாழ்ந்து படைத்த இறைவனை தொழுவதற்கு வாய்ப்பு கிடக்கச் செய்த முதுமை சிறப்பானது

#முத்துகள் 
#முதுமை

No comments:

Post a Comment