Monday 14 April 2014

மனைவியின் அருமை அறியாத கணவனால்...

மனைவியை மறக்கவில்லை
மனைவியை மறைத்து வைத்தேன் மற்றவர் பார்வையிலிருந்து
மனைவியை நான் நேசிக்கவில்லை
மனைவி என்னை நேசித்தாள்
மனைவி என்னை நேசித்தது மற்றவர்களுக்கு காட்டிக் கொடுத்தது
மனைவி என் பார்வையில் அழகாக இல்லை
மனைவி என் பார்வையில் படிக்காதவளாக இருந்தாள்
மனைவி படித்தவளாக மாறினாள்
மனைவி மற்றவளுக்கு பாடம் கற்பிக்கிறாள்
மனைவி உய்ர்ந்தவளாகி விட்டாள்
மனைவியைவிட நான் தாழ்ந்தவானகி விட்டேன்
மனைவியின் உயர்வு உலகம் அறிய வந்ததால்.

மனைவிக்கு நான் பிரச்சனையாக இருந்தேன்
மனைவியே எனக்கு பிரச்சனையாகி விட்டாள்
மனைவிக்கு நான் கொடுத்த தொல்லையால்

எத்தனை காலம்தான் உண்மையை மறைக்க முடியும்
உண்மை உயர்வானது ஒரு நாள் அது தன் நிலையை காட்டிவிடும்

மனைவியின் அருமை அறியாத கணவனால்
சிலர் வாழ்வு தகாத சிந்தனையால் சீர் கெடும்
------------------------------------------------------------------------------------------------
”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்கவேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2915
உண்ணும் போதும், உடுத்தும்போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத்
-நபிமொழி

#மனைவி

No comments:

Post a Comment