Thursday 3 April 2014

அனுபவங்கள் - சொல்லாமல் இருக்க முடியவில்லை

முகநூலில் மனதில் உள்ள அழுக்கையும் ,ஆனந்தத்தையும் கொட்டுமிடமாக இருப்பதால் .
செய்த தவறையும் எழுத அடுத்தவர் பாதுகாப்பாக இருக்க உதவும்
நல்லதையும் எழுத அடுத்தவர் செயல் படுத்தவும் உதவலாம்

#மனசு

அனுபவங்கள் - சொல்லாமல் இருக்க முடியவில்லை

கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாலை நேரத்தில் நாங்கள் மூவர் (ஒருவர் தற்பொழுது மிகவும் பிரபலமானவர்)லயோலா கல்லூரியிலிருந்து நடந்து பாண்டி பஜார் வழியாக செல்வோம் . ஒரு பெண்ணும் எங்களை பார்த்து எந்த செய்கையும் காட்டியதில்லை .அவர்களுக்கு தெரியும் போல் இருக்கிறது .இவர்கள் நல்லவர்கள் என்று . ஒரு நாள் ஒரு பெண் கையை ஆட்டி செய்கை காட்டினாள். எங்களுக்கு ஒரு நடுக்கம் இருப்பினும் அவ்வழியே ஓரிரு நாட்கள் சென்றோம் .அதே செய்கை . பின்பு தெரிய வந்தது அப்பெண் மனோநிலை பாதிக்கப் பட்டவர் என்பது. அதிலிருந்து அப்பக்கம் செல்வதுமில்லை மற்ற பெண்களையும் பார்ப்பதுமில்லை எங்கள் மனோநிலை கெடாமல் இருக்க
#தடுமாற்றம்

அனுபவங்கள் - சொல்லாமல் இருக்க முடியவில்லை

காஞ்சித் தலைவன் படப்பிடிப்புக்கு சென்றோம் .
MGR அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார் .அவர் எங்களை வெளியே இருக்கச் சொன்னார் .நாங்கள் வெளியே நிற்பதை பார்த்த கலைஞர் 'ஏன் வெளியே நிற்கிறீர்கள் உள்ளே வாருங்கள்' என்று அழைத்துப் போனார் .வெளியே நின்றவர்கள் நானும் முரசொலி செல்வமும் . MGR அவர்கள் சிரித்த முகத்துடன் எங்களைப் பார்த்த பின்பு தனது நடிப்பை தொடர்ந்தார்.
#அனுபவங்கள்

No comments:

Post a Comment