Wednesday 24 July 2013

அம்மா! நான் வாழும் நாளெல்லாம் உன் நாள்தான்

அம்மா உனை நினையாத நாள் உண்டோ !
அம்மா உனக்காக வேண்டாத நாள் உண்டோ!
அம்மா நீ இல்லாமல் நான் ஏது ?
அம்மா நான் வாழும் நாளெல்லாம் உன் நாள்தான்
அம்மா நான் பாசம் அறிய வைத்தவள் நீ தானே
அம்மா நான் தவறு செய்தாலும் அன்போடு அறிய வைத்து திருத்தியவள் நீ தானே
அம்மா உன் மடியில் சுவனம் உள்ளது யென நாயகம் சொல்லியதை உணர்வால் அறிந்தேன்
அம்மா நீ இறைவன் அருளால் சுவனம் சென்று விட்டாய்
அம்மா நான் சுவனத்தை தேடுகிறேன் உனக்கு வழி காட்டிய இறைவன் வழியிலேயே


2 comments:

  1. சிறப்பான வரிகளுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete