Tuesday 24 June 2014

புரள்வது நிற்கும் அது என் மூச்சு நிற்கும்போது.

வார்த்தைகள் விழுகின்றன
வரிகள் வருகின்றன
வாசிப்புகள் நிறைகின்றன
யோசிப்புகள் சேர்கின்றன
எங்கிருந்து கோர்வையாகின்றன
எனக்கே புரியாத புதிர்தான்

நான் ஒரு புத்தகம் எழுதுகின்றேன்
ஒவ்வொரு நிகழ்வும் அதில் இருக்கும்
நாட்கள் பறக்கின்றன
பக்கங்கள் புரள்கின்றன.

புரள்வது நிற்கும் அது என் மூச்சு நிற்கும்போது.
அதனை நானும் படிக்க முடியாது
நீங்களும் படிக்க மாட்டீர்கள் .
நீங்கள் படித்தாலும் புரியாது
மறைந்து நிற்கும் நிகழ்வுகள்
நிறைந்து நிற்கும்

தொடர்ந்து படித்து நல்லவை அல்லவை அறிந்து
அதற்கு உரிய தண்டனையோ அன்பளிப்போ கொடுக்க
ஒருவன்(இறைவன்) உறுதியாக உண்டு .

No comments:

Post a Comment