Monday 27 January 2014

இறைவனின் மகிமையால் மனதில் நிம்மதி நிறைந்து விடட்டும்

சில முல்லாக்களின் முரண்பாடுகள் முட்டிக் கொள்கின்றன
சிலர் கல்லாக் கட்டி காசுகளை கணக்கு பார்க்கின்றனர்

அப்பாவி மக்கள் அலைபாய்கின்றனர்
எப்பக்கம் உண்மை உறைந்துள்ளது
என்பதை அறியாது தடுமாறுகின்றனர்

இறையில்லம் சென்று
இறைவனை தொழுவதற்கு சென்றால்
இறையில்லத்திலும் அரசியல் கூப்பாடு
இறையில்லம் வருவோர் பல் கருத்தைக் கொண்டாலும்
இறையில்லம் வருதல் இறைவனைத் தொழுகவே

இறையில்லத்தில் ஏன் இந்த கருத்து மாறுபாடு !
இறையில்லத்தில் இறைவனை துதி பாடு
இறையில்லத்தில் இறையின் மறையை விளக்கச் சொல்
இறையில்லத்தில் நபியின் மொழிகளை மனதில் பதியச் செய்
இறையில்லத்தில் இறைவனின் மகிமையை அறியச் செய்
இறையில்லத்தில் வந்து இறைவனை தொழுதுக் செல்ல
இறைவனின் மகிமையால் மனதில் நிம்மதி நிறைந்து விடட்டும்

No comments:

Post a Comment