Monday 13 January 2014

சிந்தனையிலிருந்து பிறப்பது சிறப்பு .

சிந்தனையை கருவாக்கி
கருவினை கட்டுரையாக்கி
கட்டுரையை மற்றவர்க்கு பகிர்ந்து
மற்றவர் பலனடைய
நாமும் பயன் பெறுகிறோம்.

எழுத்துக்கு எதற்கு காப்புரிமை
எழுதும் ஆற்றலை தூவிவிட்ட இறைவன்
எழுதும் ஆற்றலை தேடி பொறுக்கிக் கொண்டவர் நாம்
பொறுக்கியதை வளர்த்துக் கொள்ளும் பொறுப்பை நம்மிடம் கொடுத்தான்
கொடுத்ததை பகிர்ந்துவிட மாண்பை அடைகின்றோம்.

நம்மால் ஒருவர் நன்மையடைய
நாமும் நனமையடைகின்றோம்
நம்மால் ஒருவர் தீமையடைய
நாமும் தீமையடைகின்றோம்

வளர்கலை பெரிது வாழ்நாள் சிறிது .
இருக்கும்வரை இறைவன் தந்த ஆற்றலை
மற்றவருக்கு பகிர்ந்தளித்து நன்மை அடையுங்கள்.
அன்புடன் வாழ்த்தும்

No comments:

Post a Comment