Friday 21 March 2014

கண்ணுக்கு கண் நோக்கி

கண்ணுக்கு கண் நோக்கி
பெண்ணுக்கு கண் கீழ நோக்க
பெண்ணுக்கு பெண்மை பெருமைத் தர
ஆணுக்கும் வெட்கம் வந்து சேர
வார்த்தைகள் வராமல் தவிக்க
மனதில் மகிழ்ச்சி பொங்க
கண்கள் சுரந்த நீர்
இமைகள் திறந்து மூடியதால்
கண்ணீர் கன்னத்தில் வழிந்தோட
வழியும் நீரை துடைக்க மறந்து
இறுகக் கட்டி அணைத்ததால்
நெஞ்சில் இருந்த சூடு
உடலிலும் பரவ
வழிந்த கண்ணீர் காய்ந்து போனது

No comments:

Post a Comment