Monday 14 October 2013

"எத்தனையோ ஊமைக் கவிகள் உலகில் பிறந்து மறைந்திருக்கிறார்கள்"

"காரிகை கற்று கவி பாடுவதிலும், பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே " கேட்டது.

"எத்தனையோ ஊமைக் கவிகள் உலகில் பிறந்து மறைந்திருக்கிறார்கள்" படித்தது

கவிதைக் கண்ட போது
எந்தன் மனம் மயங்கும்

கவிதையை யழுத மனம் விரும்பும்
கவிதை யழுத யாப்பினம் அறியேன்

கவிதை யழுத அறிந்தவர் இறைவனின் அருட்கொடை பெற்றவர்
கவிதையை படிக்க அறிந்தவர் கல்வியைக் கற்றவர்

கவிதையை படித்து புரிந்த அறிவு விளக்கம் நாடி நின்றது
கவிதையை படித்து புரிந்தவர் பாமரர் அல்லர்

கவிதையை யாக்கத் தெரியாமல் போனது
கவிதையை யாக்க இறைவன் அருள் கிடைக்காமல் போனது

இறைவனை வேண்டி நிற்கிறேன் கவிதை யாக்கும் அருளை வேண்டி
இறைவனை வேண்டி நிற்பதுடன் கவிதை யாக்க படிக்கிறேன் தள்ளாத வயதிலும்

முயற்சி நம் கையில் விட்டான் இறைவன்
முடிவை அவன் கையில் வைத்துக் கொண்டான்

நல்லதே நடக்குமென்ற நம்பிக்கை
இறைவன் மீது கொண்ட நம்பிக்கையோடு இணைந்தது

No comments:

Post a Comment