Monday 21 October 2013

கவிதையைப் பற்றியது கவிதையல்ல !



கவிதை புனைவது கடினம்
கவிதை என்று எழுதுவது சுலபம்

கவிதை எழுத முதலில் 'க' போடு
கவிதை எழுத நடுவில் 'வி' போடு
கவிதை எழுத இறுதியில் 'தை' போடு

படக் காட்சியில்  வருவது சிங்கார கவிதை
பாடப் புத்தகத்தில் வருவது யாப்புக் கவிதை
காட்சியோடு வரும் கவிதை மனதில் நிற்கும்

பாடப் புத்தகத்தில் வரும் கவிதையை  மனனம் செய்தல் கடினம்
பாடப் புத்தகத்தில் வந்ததை படக் காட்சியில் வந்தால் மனனம் செய்யாமல் மனதில் பதியும்

கவிதை எழுதி பணம் ஈட்டுதல்  கடினம்
கவிதை எழுதி மனம் நிறைவு அடையலாம்
கவிதை எழுதி கவிஞர் பட்டம் பெறலாம்

கவிதை எழுதுதல் ஒரு கலை
கவிதை நெஞ்சத்தில் நின்று விடும்
கவிதை அருவியாய் வரும்

கவிதை உணர்வுகளை தூண்டும்
கவிதை உந்துதல் சக்தியை உருவாக்கும்
கவிதை வைரக் கற்கள் பொதிந்த சங்கிலி


2 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள் கவிதை வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அற்புதமாக சொன்னீர்கள் வாழ்த்துகள்

    ReplyDelete