Tuesday 22 October 2013

சீனாவின் வளர்ச்சி


பல் போனால் சொல் போச்சு . பல காலமாக பல் மருத்துவருக்கு சீன மருத்துவரை நாடி ஓடுவது உண்டு.இப்பொழுது எதற்கு எடுத்தாலும் சீன தேசம் ஓடுகின்றனர் .வாங்குவதற்கும் சீனா,விற்பதற்கும் சீனா என்ற நிலை ஆகிவிட்டது .இரும்புத்திரை உடைக்கப்பட்டு செல்வம் கொழித்து அதிக செலவு செய்யும் நாடாகிவிட்டது. .

சீனா தேசம் சென்றாகினும் சீர் கல்வியைத் தேடு என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள் .இப்பொழுதும் சீனாவின் சிஞ்சியாங் பகுதியில்
முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

இந்தியாவில் கல்கத்தாவில் சீன மக்கள் அக்காலத்திலேயே வந்து குடியேறி பல தொழில்கள் இன்றும் செய்து வருகின்றனர். மக்கள் பெருக்கம் ஆபத்து என்று சொல்லி வந்தவர்கள் சீனாவின் மக்கள் தொகை அவர்களுக்கு சொத்தாகிமாறி வருவதனைக் கண்டு வியக்கின்றனர்

தேவைக்கு பயந்து குழந்தைகளை கொன்றவர்கள் தான் செய்த பாவமான காரியத்தினை உணர ஆரம்பிக்கும் நிலை. உலகில் அதிக மக்கள் தொகை நாடு இந்தியாவும் சீனாவும் தான். இந்த இரண்டு நாடுகள்தான் உலக அளவில் மிகவும் முன்னேறும் நாடாக இப்பொழுது மாறி வருகின்றது.

உயர் ரக அணிகல கற்களை விற்பதற்கு பேங்காக்கிலிருந்து துபாய் ,அமரிக்கா ஓடியவர்கள் இன்று சீனா பக்கம் படை எடுக்கின்றனர் . சீனா செல்வதற்கு விசா முறையும் தளர்த்தப்படுள்ளது . ஆரோக்கியதிற்கு ஒரு சீனா.உழைக்கும் திறனுக்கும் ஒரு சீனா .சீனாவின் வளர்ச்சி பிரமிக்கும் வகையில் மாறும் நிலை .

மென்பொருள் தொழில் வளர்சிக்கு நம் நாடும் அங்கு பல பெரிய தொழில் நிறுவனங்கள் நிறுவ முயற்சி
எடுக்கின்றது. கெட்டும் பட்டணம் போ! என்று சொல்வார்கள். அது இன்று சீனா போய் பணம் தேடு என்றாகிவிட்டது.

No comments:

Post a Comment