Monday 28 October 2013

சொல்வது உன்னதாய் இருக்கட்டும்

பல வார்த்தைகள் ஒரு வரியாகிறது
ஒரு கருத்து பல வரிகளாகிறது

ஒரு கருத்து மனதில் பதிகிறது
பல கருத்துகள் மறந்து போகிறது

ஒரு சொல் உயிரையே மாய்க்கிறது
ஒரு சொல் உயிரை வாழ வைக்கிறது

அம்பு எய்தவன் மகிழ்கிறான்
அம்பால் அடிப்பட்டவன் மரணிகின்றான்

எயதவனுக்கு நொய்வில்லை (நொய்வு = மனவருத்தம்)

எய்யப்பட்டவனுக்கு வேதனை

சொல்வதை உயர்வாகச் சொல்
சொல்வது உயர்வாய் இருக்க இருபக்கமும் உயர்வு

சொல்வது உன்னதாய் இருக்கட்டும்
சொல்வதில் ஏன் கடன் வாங்கி சொல்கிறாய்

உன்னிடம் உயர்வாய் இருக்க
உன்னிடம் உயர்வாய் இருப்பதனை பகிர்ந்து விடு

நெஞ்சில் ஓர் மன இறுக்கம்
நெஞ்சில் இருப்பதனை மனதில் இறுத்தி வைத்தால்

மனதில் ஓர் வெளிச்சம்
வெளிச்சத்தை வெளியில் பாய்ச்ச

சிப்பியை தேடி கொணர்ந்தாய்
சிப்பிக்குள் உள்ள முத்தை எடுக்க ஏன் முனையவில்லை

முகம்மது அலி,
நீடுர்.

2 comments:

  1. /// உன்னிடம் உயர்வாய் இருக்க
    உன்னிடம் உயர்வாய் இருப்பதனை பகிர்ந்து விடு ///

    சிறப்பான வரிகள் பல... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete