Monday 3 February 2014

இருக்கும்வரை

இருக்கும்வரை இருப்பது இறைவனின் அருள்
இருக்கும்வரை இறைவன் தந்த ஆற்றலை பயன் படுத்தினாயா!
இருந்தவரை உன்னால் பயன் பெற்றவர் யார்!
இருந்தவரை எத்தனை நன்மைகளை சேமித்து வைத்தாய் !
இருந்த போது நீ செய்த சேவைகள் உன் புகழ் கருதியா!
இருந்த போது நீ செய்த சேவைகள் இறைவனின் அருள் நாடியா !
இறந்த பின் இதைத்தான் இறைவன் இதைத்தான் கேட்பான்
இதற்க்கு இப்பொழுதே நன்மைகளை சேர்த்து வைத்துக் கொள்


உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா -- பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6309 அனஸ் (ரலி).

No comments:

Post a Comment